Tamil Cinema

Rajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா?

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Tamil Cinema News: தல அஜித் உடன் மோதும் சிவகார்த்திகேயன்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் பிங்க் ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் மே ஒன்றாம் தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்து வரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படமும் அதே நாளில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Thala 59: ‘தல 59’ படம் கால்வாசி இயக்கி முடித்த எச்.வினோத்!

போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல 59 படம் அஜித் இல்லாமல் 30 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். ஹீரோயின்களை வைத்தே படத்திற்கு சம்பந்தமான மற்ற காட்சிகளை இயக்குனர் எடுத்து முடித்து விட்டாராம். அதன்படி மே முதல் தேதி அஜித் பிறந்தநாளான அன்றைய தினம் தல 59 படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் இது.

“துக்ளக்” படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாகிறார் சமந்தா

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இது அரசியல் ரீதியான கதை என்பதால் ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக சமந்தா நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நயன்தாராவின் ஐரா படத்தின் மெலோடி பாடல் “மேகதூதம் பாடவேண்டும்”

லக்ஷ்மி மற்றும் மா குறும்படங்கள் புகழ் சர்ஜுன் இயக்கி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிக்கும் ஐரா திரைப்படத்திலிருந்து மேகதூதம் என்னும் பாடல் இன்று மாலை வெளியானது. இந்தப் பாடலுக்கு தாமரை வரிகள் எழுதியுள்ளார். சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

விஜய் சேதுபதியின் புதிய பட தலைப்பு “துக்ளக்”

விஜய் சேதுபதி தன் நீண்ட நாள் நண்பரும், இயக்குனர் பாலாஜி தரணிதரன், பிரேம்குமாரின் உதவியாளருமான டில்லி பிரசாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு துக்ளக். இதனை 96 படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார் தயாரிக்கிறார். பலாஜி தரணிதரன் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஹீரோயினாக காயத்ரி நடிக்கலாம் என்று தெரிகிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுகுறித்து விஜய் சேதுபதி கூறியதாவது: டில்லி பிரசாத் எனது 8 ஆண்டு நண்பர், மிகவும் திறமைசாலி. அவரை நம்பி கிணற்றில் கூட குதிக்கலாம். அந்த அளவிற்கு நம்பிக்கையானவர். துக்ளக் கதையை ஏற்கெனவே என்னிடம் சொன்னார். நான் நடிக்கிறேன் என்று கூறியிருந்தேன். எனக்காக காத்திருந்தார். இப்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது என்றார்.

வெளியானது நீயா-2 படத்தின் டிரைலர்

கடந்த 1979-ம் ஆண்டு இயக்குநர் துரை இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான படம் நீயா. இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீபிரியா பாம்பாக வாழ்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது பாம்பை மையப்படுத்தி நீயா-2 என்னும் பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க வரலட்சுமி சரத்குமார், காத்ரீன் தெரெஸா, ராய் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ப்ரோமஷன் வேலையின் ஒரு பகுதியாக படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

டிக்டாக் வீடியோ பாத்துட்டு தான் எங்களை அட்லி அழைத்தார்

சின்னத்திரை பிரபலமாக ஆரம்பத்தில் வளம் வந்த ரோபோ சங்கர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஸ்வாசம் படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அவரது மகள் இந்திரஜா, அவர் அதிகம் டிக்டாக் வீடியோக்களை செய்து வந்தார். தற்போது அவர் விஜய் 63 யில் நடிக்கயுள்ளாராம். இதற்கான வாய்ப்பு எப்படி வந்தது என்பதை பற்றி பிரியா ரோபோ சங்கர் கூறியதாவது “ எங்க பொண்ணு செய்யும் டிக்டாக் வீடியோக்களை பார்த்துள்ளார் இயக்குநர் அட்லி. மேலும் விஜய் 63 யில் இந்திரஜா நடிப்பது தொடர்பாக அவரது ஆப்பிஸில் அழைப்பு வந்ததாக கூறினார்”. விஜய் 63 யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.

வைரலாகும் நடிகை ஸ்ரேயா நீச்சல் உடையில் போட்டோ ஷுட்

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ஸ்ரேயா, பத்திரிகைக்காக நீச்சல் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ள படம் வைரலாகி வருகிறது. மார்க்கெட்டை இழந்த பின்னர் விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, தான் வெளியூர் சென்றால் அங்கு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து பார்த்திபன் ராஜினாமா

டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டத்திற்கு பிறகு தயாரிப்பாளர் சங்க துணை தலைவராக கெளதம் மேனனுக்கு பதிலாக நடிகர், இயக்குனர் பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தான் தன் பதவியை ராஜினாமா செய்வதாக பார்த்திபன் கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில “நாமும் ஸ்பெஷல் என்பது மறந்து நம் சுயம் பாதிக்கப்படும் போது சங்கம் சமூகம் என்பதெல்லாம் மூன்றாம் பட்சமே!” என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகிறது எல் கே ஜி ட்ரைலர்

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரபு இயக்கி வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படம் எல் கே ஜி. அரசியல் நையாண்டி கலந்த திரைப்படம் என்பதால் மக்களிடையே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தின் ட்ரைலர், இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி இன்று நடக்கவிருக்கும் “இளையராஜா 75” இசை நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது.

இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கிறார்

இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்காக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை வரும் 2, 3 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

தனது படத்தை ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்த நடிகர் சிம்பு

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் இன்று வெளியானது. சென்னையில் காலை 5 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. சென்னை ரோகிணி திரையரங்கில் காலை 5 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் சிம்பு, நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்தனர்.

விஜய் சேதுபதியுடன் நடிப்பதை டுவிட்டரில் உறுதி படுத்திய ஹீரோயின்

சிம்பு நடித்த ‘வாலு’, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்க உள்ள அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் தான் நடிக்கவுள்ளதை நடிகை ராஷி கண்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொன்னியின் செல்வன்” தமிழ் வெப் சீரிஸ் தயாரிக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

சோழர்களில் முக்கியமானவனும், ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் பற்றிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை, தமிழ் வெப் சீரிஸ்-ஆக தயாரிக்கும் முயற்சியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசின் காலத்தைப் பற்றி விறுவிறுப்பும் வீரமும், தொன்மையும், காதலும், நகைச்சுவையும் கலந்த காவியமாக இது இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்: நடிகர் சிம்பு

பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கட் அவுட் வைக்கும் போது ஏற்பட்ட பிரச்னையில் எனது ரசிகர் இறந்ததால் வேதனையில், பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அண்டா நிறைய பால் ஊற்றி பேசாத கட் அவுட்டுக்கு ஊற்றாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு கொடுங்கள் என்றே கூறினேன். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறியதை மறப்பவன் இல்லை நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அஜீத்தின் AK 59 படத்தில் நடிப்பவர்களின் பட்டியல் வெளியானது

பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார். இது அவருடைய முதல் தமிழ்ப்படம் ஆகும். செய்தி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரங்கராஜ் பாண்டே இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும், சாரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரீயா டாரியாங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரனும் படத்தில் இடம்பெற்றுள்ளார்.

நயன்தாரா செயலால் அதிர்ச்சியில் கோலிவுட் தயாரிப்பாளர்கள்!

தான் நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பதை தனது கொள்கையாக வைத்திருந்த நடிகை நயந்தாரா, சீரஞ்சீவி நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டமான படமான ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ பட புரொமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் கோலிவுட்டில் நயந்தாராவை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களும், அவருடன் நடித்த சில ஹீரோக்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் படத்தை தயாரிக்க பின்வாங்கும் முக்கிய நிறுவனங்கள்

தமிழ் சினிமாவின் மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான், அவர் அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணைகிறார். இதற்கான வேளைகளில் இயக்குனர் முருகதாஸ் இறங்கி படு வேகமாக பணிகளை முடித்து படபிடிப்புக்கு தயாரிகிவிட்டார். இருந்தும் இந்த படத்தை தயாரிப்பதாக சொன்ன லைக்கா நிறுவனம், சன் பிக்சர்ஸ் இரண்டும் பின் வாங்கிவிட்டது. அடுத்தாக இருப்பவர் கலைபுலி தாணு தான், அவரும் இன்னும் சம்மதம் சொல்லவில்லை என்று தெரிகிறது. இந்த நிறுவனங்கள் பின்வாங்குவதற்கான காரணம் தெரியவில்லை.

வெளியானது “வந்த ராஜாவா தான் வருவேன்” படத்தின் 2-வது சிங்கிள்

நடிகர் சிம்பு நடிப்பில் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியே வர உள்ள வந்த ராஜாவா தான் வருவேன் படத்தின் 2-வது சிங்கிள் “வாங்க மச்சான் வாங்க” வெளியானது. இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான “அத்தரிண்டிக்கி தாரிடி” படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். சுந்தர் சி இயக்கத்தில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

மாஸான போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ள ரஜினிகாந்த்

கொடி பறக்குது, மூன்றுமுகம், பாண்டியன் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது, மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்க உள்ள புதிய படம், ஒரு மாஸான போலீஸ் படமாக இருக்கும் என்று தெரிகிறது. இது அலெக்ஸ் பாண்டியன், மிஸ்டர் ரைட் போன்ற கேரக்டர் போன்று மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் மாப்பிள்ளை புகைப்படத்துடன் திருமண தேதியும் வெளியானது

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்து, பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, 2-வதாக திருணம் செய்ய உள்ளார். அடுத்த மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார். விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி புதுப்படங்களில் நடிக்கமாட்டேன்… நடிகை ரித்விக்கா

இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரித்விகா. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். இந்நிலையில் தனது திருமணம் குறித்து பேசிய அவர், என் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும். புதிய படங்கள் ஏதும் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்திற்கு பின்னர் நடிப்பது குறித்து எனது கணவர் முடிவு செய்வார்.” என குறிப்பிட்டார்.

நயன்தாரா பேசிய இரட்டை அர்த்த வசனத்தில் உருவாகும் புதிய படம்

தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நானும் ரவுடிதான். இப்படத்தில் க்ளைமேக்ஸ் காட்சிக்கு முன்பாக ஒரு காட்சியில் பார்த்திபனிடம் பேசும் ”ஒங்கள போடணும் சார்” என்ற வசனம் பேசுவார். இந்த இரட்டை அர்த்த வசனத்தையே ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர். ஜித்தன் ரமேஷ் உடன் 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

தன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்

நடிகர் தனுஷ் வெற்றிமாறனுடன் இணைந்து கொடுத்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய மூன்று படமும் செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் தனுஷ் 4வது முறையாக வெற்றிமாறனுடன் கைக்கோர்த்துள்ளார். அப்படத்திற்கு அசுரன் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இதில் தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளார். இவர் தனுஷை விட 5 வயது அதிகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்குகிறது தளபதி விஜய் நடிக்கும் ‘விஜய் 63’ படத்தின் படப்பிடிப்பு

சர்கார் படத்தை அடுத்து விஜய், இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணித்துள்ள படம் “விஜய் 63”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

ஹாலிவுட்-ன் உயரிய கோல்டன் ரீல் விருதுக்கு ரஜினியின் 2.0 பரிந்துரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியாகி 713 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்த 2.0 திரைப்படம் புகழ்பெற்ற கோல்டன் ரீல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒலித் தொகுப்பு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கும், சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவிலும் 2.0 படம் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மோசன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் அமைப்பின் இறுதி பரிந்துரை பட்டியலில் இந்த படத்திற்கு இடம் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் 17-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில்நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

‘தல’ அஜீத் பற்றி இதுவரை யாரும் அறியாத விஷயங்கள்

தல அஜீத்தின் விஸ்வாசம் திரைப்படம், கடந்த 10ம் தேதி வெளியாகி, இன்றைய எட்டாம் நாளில் தமிழ்நாட்டில் 125 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் செய்துள்ளது. இந்நிலையில், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, திரையுலகில் முத்திரைபதித்து, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்களால், “அல்டிமேட் ஸ்டார்” என்றும் “தல” என்றும் அழைக்கப்படும் இவரை பற்றி அறியாத பல விஷயங்களை இங்கே காணலாம்.

நடிகராக மட்டுமின்றி ஒரு கார் பந்தய வீரராகவும் இருந்து வரும் அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.

Thala Ajith Car Racing

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்டு ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார்.

பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

Thala Ajith Bike Mechanic at early stage

1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் இவரது முதல் படம், செல்வா இயக்கத்தில், வெளியான ‘அமராவதி’. 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. .

தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார்.

ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

Thala Ajith Veeram Movie

பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை.

தீனா படத்தில் உள்ளூர் ரவுடியாக நடித்ததை தொடர்ந்து, அவரை ரசிகர்கள் “தல” என்று அழைக்கத் தொடங்கினர்.

பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.

Thala Ajith Yennai Arinthal Movie

பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.

ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி மியாமி குசன், நடிகை சிம்ரனுடன் இணைந்து “நெஸ்லே சன்ரைஸ்” ஆகிய வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார்.

Vedalam Ajith Kumar

நடிகர் அஜீத் நான்வெஜ் உணவுகளை நன்றாக சமைத்து மற்றவர்களுக்கு வழங்குவார் என்ற போதும், அவர் வெஜிடேரியனாகவே இருந்து வருகிறார். மெக்சிக்கன் உணவுகளை சமைப்பதில் நிபுணராக இருந்து வரும் இவர், அந்த உணவு வீடியோக்களை யூடிப்பில் போட்டுள்ளார். பெரும்பாலும், தனது தனிப்பட்ட உணவாக இவர், வேகவைத்த காய்கறிகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுவார்.

Ajith Kumar with MIT Students
கார், பைக் ரேஸ்களில் உள்ள ஆர்வத்தை தாண்டி, அஜீத்துக்கு ஏரோ மாடலிங்கிலும் ஆர்வம் உண்டு. விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ள அஜித், ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களுக்கு ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக அஜித் நியமிக்கப்பட்டார்.

இது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனையை படைத்தது. இந்த பிரிவில் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று அஜித்தின் தக்ஷா அணி முதல் இடத்தையும் தட்டிச் சென்றது என்பது கூடுதல் தகவல்.

இந்தியன் 2 குறித்து வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. வசூலைக் குவித்து ஹிட் அடித்த இந்தப் படத்தின் 2-வது பாகத்தை 22 வருடங்களுக்குப் பின்பு ஷங்கர் தற்போது இயக்குகிறார். இதையடுத்து படத்தின் சூட்டிங் நேற்று முதல் தொடங்கி இருப்பதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு ஏ.ஆர்.ரகுமான் ‘படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்’ என்று பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் பேட்ட, விஸ்வாசம் ரூ.200 கோடி வசூல் செய்யும்: பிரபல விமர்சகர் கருத்து

பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. வசூலில் தமிழகத்தில் விஸ்வாசமும், மற்ற இடங்களில் பேட்ட படமும் முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, பேட்ட, விஸ்வாசம் 2 படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால், இரண்டு படங்களும் சேர்ந்து தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்றார்.

புதிய வாய்ப்புகளால் ஏற்பதா? வேண்டாமா? யோசனையில் “பேட்ட” பட ஹீரோயின்

பொங்கல் ஸ்பெஷலாக வெளியான ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் நடிகை சிம்ரன் திருமணத்திற்கு தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் மிக அழகான நடுத்தர வயது பெண் கேரக்டரில் சிம்ரன் நடித்திருந்தார். இந்நிலையில், தெலுங்கு படங்களில் அம்மாவாக நடிக்க அவரும் வாய்ப்பு வந்துள்ளது. சூப்பர் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன் இதனால் என்ன செய்வது என யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் அதிகாரப்பூர்வ தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் வெளியீடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ந் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியானது. இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ரஜினியின் பேட்ட தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்த சிறிது நேரத்தில் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.

இன்று முதல் தொடங்குகிறது கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். 2.0 படத்தைப் போலவே இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க, சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் இந்த படத்தின் இன்று முதல் தொடங்குகிறது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரே அறிவிப்பார்: திருப்பதியில் நடிகர் தனுஷ் பதில்

நடிகர் தனுஷ் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற கல்யாண உற்சவ சேவை தரிசனத்தில் கலந்து கொண்டு அவர் ஏழுமலையானை தரிசித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் தனுஷிடம், வரும் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுகிறாரா அல்லது கூட்டணி அமைக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரே அறிவிப்பார் என்றார்.

அதிக பட்ஜெட்டி செலவில் இசைக்கலைஞராக விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்

இயக்குநர் ஜனநாதனிடம் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் இசைக்கலைஞராக “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்காக 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையில் நடக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தன் இசையால் அனைவரையும் கவர்ந்த விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.தற்போது இவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வந்துள்ளது படத்தின் பெயர் தமிழரசன் படத்தின் தலைப்பில் எப்பவும் கவரும் விஜய் ஆண்டனி இந்த படத்தின் தலைப்பிலும் ரசிகர்களை கவர்கிறார் இதைவிட இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இவர் படத்துக்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.

அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா-ஜோதிகா மகன் தேவ்

நடிகர் சூர்யாவின் மகன் தேவ்விற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அறிமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தேவை அழைத்துள்ளனர். அந்த படத்தின் கதையை கேட்டறிந்த சூர்யாவிற்கும் பிடித்து விட்டதாலும், தேவ்விற்கும் நடிக்கும் ஆர்வம் இருந்ததாலும் நடிக்க அனுமதித்துள்ளார். சூர்யாவின் அப்பா சிவகுமாரில் இருந்து தற்போது மூன்றாவது தலைமுறையாக சினிமாக்குள் நுழைந்துள்ளனர்.

அன்று அம்மாவுடன்… இன்று மகளுடன்… ஜோடியாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இயக்குனர் முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம் அரசியல் சார்ந்த படம் என்று கூறப்படுகிறது. ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முடிவு ஏ. ஆர். முருகதாஸ் முடிவு செய்துள்ளார். அன்று இவரின் அம்மா மேனகாவுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்தார் இன்று மகள் கீர்த்தி சுரேஷ்வுடன் நடிக்க இருக்கிறார். முருகதாஸ் படத்தில் ரஜினி முதல்வர் ஆவது போன்று காட்சிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.