குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு வருகிறார். அதன்படி இன்று சென்னை வரும் அவர் தி. நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்பொழுது மகாத்மா காந்தி சிலையையும் திறந்து வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து ஆந்திர செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.