New Delhi: டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு அரசின் தலைமைச் செயலாளர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களை தூண்டிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. நீண்ட சமரசத்திற்கு பிறகு போராட்டம் திரும்பப் பெறப்பெற்றது .இந்நிலையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மார்ச் 1ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.