பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது, பெரிய நடிகர்கள் கேள்வி எழுப்பினால் மக்களுக்கு அது எவ்வளவு நல்லதாக அமையும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா நடிகர்களும் நல்ல இடத்தில் உள்ளதால், அவர்களால் மாற்றம் கொண்டு வர முடியும். எங்கேயோ நடக்கிறது என்று அவர்கள் அமைதியாக இருந்தால் ஒருநாள் அவர்களது வீட்டிலேயே நடக்கும், அப்போது அவர்கள் வருந்துவார்கள் என்றார்.