PMK

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

பாஜக

  1. கன்னியாகுமரி
  2. சிவகங்கை
  3. கோவை
  4. ராமநாதபுரம்
  5. தூத்துக்குடி

பாமக

  1. தருமபுரி
  2. விழுப்புரம்
  3. அரக்கோணம்
  4. கடலூர்
  5. மத்திய சென்னை
  6. திண்டுக்கல்
  7. ஸ்ரீபெரும்புதூர்

தேமுதிக

  1. கள்ளக்குறிச்சி
  2. திருச்சி
  3. சென்னை வடக்கு
  4. விருதுநகர்
  5. தமிழ் மாநில காங்கிரஸ்

    1. தஞ்சாவூர்
    2. புதிய தமிழகம்

      1. தென்காசி
      2. புதிய நீதி கட்சி

        1. வேலூர்
        2. என்.ஆர்.காங்கிரஸ்

          1. புதுவை

ராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேரில் சந்தித்தார். இவர்கள் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளும் இடம் பெற்றுள்ளதால் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து இருப்பார்கள் என கருதப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் தோற்கடிப்போம், காடுவெட்டி குருவின் குடும்பத்தார் ஆவேசம்

பாமகவின் மூத்த நிர்வாகி காடுவெட்டி குருவின் குடும்பத்தார் அண்மையில் செய்தியாளரை சந்தித்தனர். அப்போது பாமகவின் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை நாங்கள் நிச்சயம் தோற்கடிப்போம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து குருவின் தாயாரே போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அண்மையில் அவரது குடும்பத்தினர் “ மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம்’’ என்ற அமைப்பை துவங்கினர். அப்போது நூறுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குருவின் மகன் கனலரசன் கலந்து கொள்ளவில்லை. இதற்கு பதிலளித்த அவரது குடும்பத்தினர் கனலரசன் மீது ராமதாஸ் குடும்பத்தாரால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவரை அழைத்து வர வில்லை என கூறினர். மேலும் குருவின் உடல் மோசமான சூழ்நிலைக்கு சென்ற நிலையிலும் அவரை கண்டுகொள்ளாது ராமதாஸும் , அன்புமணியும் இருந்தனர். வெளிநாட்டிற்கு அழைத்து சென்ற மருத்துவம் பார்க்கலாம் என தொடர்ந்து சொல்லி வந்தனர். ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார். குருவை ராமதாஸ் குடும்பத்தினர் கொன்றுவிட்டனர் என ஆதங்கப்பட்டனர்.

பாமக தலைவர் ஒரு சந்தர்பவாதி

தேர்தல் வரும் சமயத்தில் எங்கு சேர்ந்தால் லாபம் என்றே ராமதாஸ் யோசிப்பார். திமுகவையும், அதிமுகவையும் விமர்சித்துவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்தால் பாமக நிர்வாகிகள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். கடந்த 30 வருடங்களாக குரு பாமகவுக்கும் வன்னியர்கள் நலனுக்காகவும் உழைத்து வந்தார். இதனால் பெரும்பாலான பாமக தொண்டர்களின் ஆதரவு எங்கள் குடும்பத்தினர்க்கு தான் என்றும் தெரிவித்தனர். ராமதாஸ் குடும்பம் எங்களை தொடர்ந்து அச்சுருத்தி வருகிறது. அதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என கூறினார். வரும் மக்களவை தேர்தலில் அன்புமணியை தோற்கடிப்போம். அதில் உறுதியாய் உள்ளோம் என்றனர்.

மூத்த நிர்வாகி குரு இருக்கும் வரை பாமக தலைமையோடு நெருக்கமாக இருந்தார் குரு ஆனால் அவர் மறைந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எதனால் இப்படி என்ற கேள்வி மக்களின் மனதை சுற்றி சுற்றி வருகிறது. குருவின் குடும்பத்தாரின் கருத்துக்கள் தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைந்தது அந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உட்பட சில கட்சிகள் இருக்கின்றன. யாருக்கு எந்த தொகுதிகள் என்பதை ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமையகம் வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக தொகுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.

சிதம்பரம் தொகுதியில் பாமக விடுதலைச் சிறுத்தைகள் நேரடிப் போட்டி

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளது. அதே சமயம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேரடியாக களம் காணும் என தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இயல்பாகவே வார்த்தைப் போர் நடைபெறும் சூழலில் தற்போது நேரடியாக களம் காணுவதால் யார் வெற்றி பெறுவார் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பாமக-விற்கு எந்தெந்த தொகுதிகள்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை சிதம்பரம், தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், திண்டுக்கல், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ஆரணி தொகுதியை பொறுத்தவரை சௌமியா அன்புமணி அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ்க்கு அழைப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இன்று கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்வு சென்னை வண்டலூர் அருகே நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அழைக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வரவேற்றனர். ஆகையால் இன்றைய நிகழ்வில் ராமதாஸ் அவர்கள் நிச்சயம் பங்கேற்ப்பார் என தகவல் வெளியாகியுள்ளன.

எந்த தொகுதியிலும் போட்டியிட தயார், தமிழிசை பேச்சு

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசன், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது. பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை “எந்த தொகுதியாக இருந்தாலும் நான் போட்டியிட தயார்”, அது எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார்.

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் ராமதாஸ் கணிப்பு

Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இடம்பெற்றுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவும் எங்கள் கூட்டணிக்கு இணைவார்கள் என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வேளையில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி தமிழிசை பேச்சு

BJP AIADMK PMK alliance 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என தமிழிசை பேசியுள்ளார். எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம்தான் பெரிது எனவும் , 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாகவும் , அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

பாமக நிச்சயம் தோல்வியை சந்திக்கும் வன்னியர் சங்க தலைவர் பேட்டி

Elections 2019: அகில இந்திய வன்னியர் சங்கத்தலைவர் ஜெய ஹரி அன்புமணி ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது அனைவருக்கும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.அதிமுக பாமக பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திப்பது நிச்சயம் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அன்புமணி ராமதாஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாமகவின் மாநிலத் துணைத் தலைவர் விலகல்

PMK: பாமகவின் மாநிலத் துணைத் தலைவராக நடிகர் ரஞ்சித் பதவி வகித்து வந்தார். ஆனால் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவோடு கூட்டணி வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஊழல் கட்சி என சொல்லிவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்து உள்ளது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

நம்பிக்கை இழக்காதீர்கள்- அன்புமணி

Lok Sabha Elections 2019: சென்னையில் இன்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது “அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கும் எங்களின் கோரிக்கைகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை விடாமல் இருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதி அளித்தார். எழுவர் விடுதலை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீட் மற்றும் மதுவிலக்கு வேண்டாம் என தொடர் அழுத்தம் கொடுப்போம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டு 6% வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் அதற்காக அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழக மக்கள் எங்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையை பாராட்டினார்கள். ஆனால் ஓட்டு போடவில்லை. தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனியாக வரும் 15 ஆண்டுகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதனால் தான் வியூகத்தை மாற்றியுள்ளோம்” என கூறினார்.

தமிழகத்தை ஆள்வது அல்ல முன்னேற்றுவது எங்கள் நோக்கம், அன்புமணி பேச்சு

Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டே இந்த கூட்டணி அமைந்துள்ளதாகவும், தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கே ஆதரவு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றமே எங்கள் நோக்கம் என்றார் அன்புமணி ராமதாஸ்

முதல்வர் பழனிச்சாமி, தமிழிசை சந்திப்பு

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர், அதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வேளையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திதுள்ளார், இந்த சந்திப்பில் பாஜகவிற்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விவாதிக்கபட்டலாம் என தகவல்.

ராமதாஸ் இல்லத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு விருந்து

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விருந்திற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று முதல்வர் துணை முதல்வர் அமைச்சர் பெருமக்கள் வருகை புரிந்தனர். மக்களவைத் தேர்தல் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விவாதித்ததாக தெரிகிறது.

உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Election 2019 Tamil Nadu:  மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்த விவரம்

பாமக – 7
பாஜக 5

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.

இணைந்தது பாமக

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

கைகோர்த்த பாஜக

ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?

இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

திமுக கூட்டணிக்கு சவாலா ?

இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.

யாருக்கு எந்த தொகுதிகள் ?

அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?

மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.

Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Elections 2019 : பியூஷ் கோயலுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

Lok Sabha Election 2019 Alliance: இன்று காலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, பாமகவிற்கு 7 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஸ், ஆகியோர் சந்திப்பு நடைபெறுகிறது, பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.

Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

Lok Sabha Elections 2019 : உறுதியானது அதிமுக பாமக கூட்டணி

Lok Sabha Election AIADMK – PMK Alliance: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாமாகவும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாமகவிற்கு என துணை முதல்வர் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடக்க இருக்கும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

2019 Lok Sabha Elections Tamilnadu: வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது, இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டணி அறிவிப்பு வெளியாகும் இந்த சமயத்திலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார், அண்மையில் மக்களவையில் பேசிய தம்பிதுரை ஜி.எஸ்.டி வரி தொடர்பாக மாநில அரசிற்கு வர வேண்டிய தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், அதனை பெற பிச்சை எடுப்பது போல் கேட்டு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாஜகவோடு நட்பும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்ற அதிரடி பதிலையும் கொடுத்துள்ளார், இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் தம்பிதுரைக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தெரிகிறது. இதனை அதிமுக தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி, ஒருவேளை கூட்டணி அறிவிப்பு வெளியானதும் தனது அதிருப்தியை தெரிவிப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. இதனை தவிர்க்க அதிமுக தலைமை அவரை சமாதான செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது தம்பிதுரை கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர், வருகின்ற தேர்தலில் அவர் அதே தொகுதியில் போட்டியிடலாம். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கிட்டதட்ட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் என்பதால் அதே தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?

2019 Lok Sabha Elections Tamilnadu: பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று ஓரிரு மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் தேசிய செயலர் முரளிதர ராவ் “தமிழகத்தில் கடந்த தேர்தலை எப்படி கூட்டணியோடு அணுகினோமோ அதேபோல் பலம் பொருந்திய கூட்டணியை அமைத்து இந்த தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

அதோடு நிற்காமல் தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகி விட்டதாக தெரிவித்தார், இதனால் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும், மேலும் பாஜக அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனவும் கூறினார்.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

ஆனால் அவர் பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெரும் என்பது குறித்து பேசவில்லை. பாஜக தலைவர்கள் சிலர் அதிமுகவோடு தான் கூட்டணி அமையும் என பேசிவருகிறார்கள். மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையை பெருத்தவரையில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி குறித்து இன்னும் முடிவெக்க வில்லை. பாமக இளைஞர் அணி செயலர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அண்மையில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

மேலும் தேமுதிகவும் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பின்னர் அதில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் திமுகவின் மெகா கூட்டணிக்கு நிகரான ஒரு பலம் வாய்ந்த கூட்டணியாக பாஜக கூட்டணி அமையும்.

ஒருவேளை நான்கு கட்சிகளும் ஒர் அணியில் திரளும் பட்சத்தில் தொகுதி பங்கீடு சவாலாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடதக்கது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

பாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?

அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை மாநிலமே எதிர்பார்த்து வரும் நிலையில் கட்சி தலைமை அமைதி காத்து வருகிறது. இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், “பாஜக, பாமக மற்றும் தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” என்றும் கூறியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் சதி நடக்கிறது – ராமதாஸ்

பேரறிவாளன் நளினி முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 151 நாட்கள் ஆகிவிட்டன. எனினும் இந்த விஷயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு இருப்பது நியாயமில்லை. அதில் ஏதோ சதி இருப்பதாகத் தோன்றுகிறது. ஒருபுறம் அற்புதம்மாள் நீதி கேட்கும் பயணத்தை மேற்கொள்ள மறுபுறம் சிறையில் நளினியும் முருகனும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக- பாமக கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாயின. அதனை திமுகவோடு தற்போது ஏற்கனவே கூட்டணிக் கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக எதிர்த்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாமக… திமுகவை ஒழிக்கவும் தயங்காது என்று கூறிய அவர் பாமக சாதியக் கொலைகளை வெளிப்படையாக ஆதரிக்கும் கட்சி என்று சாடினார்.