PM Narendra Modi

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தமிழே இருக்காது – பாலகிருஷ்ணன்

கரூரில் பேசிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடு உடைய மோடி நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திட்டங்களை துவக்கி வைப்பதன் நோக்கம் என்ன? அவை அனைத்தும் கையூட்டு திட்டங்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தமிழே இருக்காது என்று கூறினார்.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு

பிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு அரசு விழாவிலும் மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் வெளியான அறிக்கையின்படி பிரதமரின் வருகை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை

மக்களவை தேர்தலினை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள், திமுக காங்கிரஸ் கட்சிகளை பொருத்தவரை அவர்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பாஜகவை பொருத்தளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை என்று விமர்சித்துள்ளார். அவர்களது அராஜக ஆட்சியினை அகற்ற முயற்சிப்போம் என்றார்.

லோக்சபா தேர்தல் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி – ராகுல் காந்தி

லக்னோவில் நடந்த பேரணியின் முடிவில் பேசிய ராகுல் காந்தி, “வருகின்ற மக்களவை தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி” என்று கூறியுள்ளார். பா.ஜ.க அரசு, தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் அவர்களின் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூறிய அவர், ஏழை எளிய மக்களை ஆளும் அரசு மறந்து விட்டதாக கூறினார். மேலும் மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்த மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொகுதி பங்கீட்டில் இழுபறியா ?

மக்களவை தேர்தல் களம் தமிழகத்தில் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது, அதனை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், இந்த மாதம் ராகுல் காந்தியும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார், அது ஒருபக்கம் இருந்தாலும் திரைக்கு பின்னர் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியே கூட்டணியோடு தான் தேர்தலில் ஈடுபட உள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கூட்டணியோடு தான் தேர்தலை அணுக இருக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எளிதில் நிறைவு பெறாததற்கு, தொகுதி பங்கீடும் ஒரு இடையூறாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, முந்தைய தேர்தல் சமயத்தில் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லாததனால் கூட்டணியே முறிவடைந்துள்ளது. எடுத்துகாட்டாக 2016 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவும் தமிழ்மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்தை நல்ல முடிவு எட்டப்பட்டாலும் தொகுதிகள் குறைவு என்பதற்காக வெளியேறிய தமிழ்மாநில காங்கிரஸ் மக்கள் நலக் கூட்டணியோடு இணைத்து கொண்டது. அதே நிலைதான் தமிழகத்திலும் நிலவுவது போல் தெரிகிறது.

திமுக பொருத்தவரை இம்முறை மெகா கூட்டணி அமையும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது.. அதிமுகவை பொருத்தவரை தேசிய கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறினாலும் பாஜகவுடனான கூட்டணிக்கே அதிக வாய்ப்பு என்பதை அரசியல் நிகழ்வுகள் தெரியப்படுத்துகிறது

இன்னும் சில

தமிழக கட்சிகளில் இன்னும் சில கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ் மேலும் சில உள்ளூர் கட்சிகளும் முடிவை அறிவிக்காமல் இருக்கின்றன.

எங்களுக்கு இந்த தொகுதி

பொதுவாகவே தொகுதி பங்கீட்டில ”’எத்தனை தொகுதி” என்பதை விட ”எந்த தொகுதி” என்பதே சலசலப்பை ஏற்படுத்தும், சில கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வரவேற்பு இருக்கும், ஆகையால் அவர்கள் அங்கே போட்டியிட நிர்பந்திப்பது வழக்கம், அதற்கு கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதுபோல் பல்வேறு பிரச்சனைகள் குறுகிய காலத்தில் தலைதூக்கும், இதனை சமாளித்து தேர்தலை சந்திப்பது எளிதல்ல.

தற்போதைய நிலையில் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் தான் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

யார் யாருடன் கூட்டணி ! இன்னும் சில தினங்களில் !

மோடிக்கு எதிராக கருப்பு கொடி – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது

பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரின் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிமுக தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து வைகோ உள்பட மதிமுக தொண்டர்கள் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்

நேற்று தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே டிவிட்டரில் GO BACK MODI என்ற வாசகம் பிரபலமாகி வந்தது, மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியே நேரடியாக பிரச்சார களத்தில் குதித்துள்ளார். அந்த வகையில் நேற்று திருப்பூரில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார், மேலும் திருப்பூரில் நடைபெற்ற தமிழக அரசின் விழாவிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு திட்டங்களை காணொளி மூலம் அவர் திறந்து வைத்தார், பாஜக பொதுகூட்டதில் பேசிய மோடி காமராஜர் ஆசை பட்ட ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது என்று கூறிப்பிட்டார்

தமிழக அரசியலில் பிரதமர் மோடியின் வருகை எதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு வரலாறே பதில் சொல்லும் பிரதமர் மோடி பல முறை தமிழகம் வந்திருந்தாலும் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் இல்லை என்பதே நிதர்சனம். மக்களவை தேர்தலை நோக்கி நாம் பயணிக்கும் இந்த தருணத்தில் மோடியின் வருகை முக்கியதுவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது, கூட்டணி குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபட்டது, ஆனால் அது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை தமிழக மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் பாஜக அரசு முயற்சித்து வருவதாகவும், தொழிலாளர்கள் நலம் சார்ந்த திட்டங்களை மட்டுமே எங்கள் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது, மேலும் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம் பாதுகாப்பு தளவாடங்களில் நம் நாடு தன்னிறைவு அடைய இரண்டு பாதுகாப்பு பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதில் ஒன்று தமிழகத்தில் தான் அமையவுள்ளது என்றார் மோடி. சகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்கள் பலப்படுத்தப்படும் எனவும், ஊழல் மற்றும் தவறான செயல்ளை எங்கள் அரசு தடுத்து நிறுத்தும் என்றார் பிரதமர் மோடி. குறிப்பாக சாலை மேம்பாடுகளில் அரசு கவனம் செலுத்தும் எனவும் உறுதியளித்தார்

காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளது காங்கிரஸ். நாட்டின் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டாமல் தற்போதிய ராணுவத்தை சிறுமைபடுத்தும் வகையிலும் பேசிவருகிறது காங்கிரஸ் கட்சி. பிரச்சாரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினரின் கேலி பேச்சுகளை கேட்க மக்கள் தயாராக இல்லை என்று காங்கிரஸை விமர்சித்தார், மேலும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு இப்போது பேக்கேஜ் முறையில் ஒரு குடும்பம் ஜாமின் வாங்கி வருகிறது என மறைமுகமாக பா.சிதம்பரத்தை விமர்சித்தார். பிரதமரின் தமிழகம் வருகை பாஜகவின் வாக்கு வங்கியில் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தேர்தல் முடிவுகள் தான் தெரியப்படுத்தும்.

அடுத்தக்கட்டமாக பிப்ரவரி 19 அன்று பிரதமர் பிரச்சாரத்திற்க்காக கன்னியாக்குமரி செல்கிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.

கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா ? வைகோவிற்கு ஹச்.ராஜா சவால்

பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார் வைகோ, அத்தோடு பிரதமரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹச் ராஜா ”வைகோவால் கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா” சவால் விடுத்துள்ளார்.

புதிய சி பி ஐ இயக்குனராக ரிஷி குமார் ஷுக்லா நியமனம்

சி பி ஐ இயக்குனராக அலோக் வர்மா பதவி விலக்கப்பட்டதை அடுத்து நாகேஸ்வர ராவ் தற்காலிக இயக்குனராக டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இதை அடுத்து, முன்னாள் மத்திய பிரதேச டி ஜி பி ரிஷி குமார் ஷுக்லா புது இயக்குனராக பிரதமர் தலைமையிலான குழு நேற்று நியமித்தது.

இடைகால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான் – மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இன்று பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் தாக்கூர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். ’’நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைகால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான், தேர்தலுக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் இதனை காட்டிலும் சிறப்பம்சங்களை உடையதாய் அமையும், ஏழை எளியோருக்கு பயனுள்ளதாகவும், குறிப்பாக இளம் பட்டதாரிகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அமைக்கப்படும்’’. என்றார் பிரதமர் மோடி.

இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

கடந்த ஆண்டு பிரதமர் மோடி, மாணவர்கள் தேர்வு எழுதும் போது சந்திக்கும் பிரச்னைகளை களையவும், அவர்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியும் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் தேர்வு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்தியா மட்டுமல்ல ரஷ்யா, நேபாள், குவைத், சவுதி அரேபியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் மாணவர்களும் மோடியுடன் கலந்துரையாடுகின்றனர்.

மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பாராட்டை பெற்ற பிரதமர் மோடியின் இன்சூரன்ஸ் திட்டம்

மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் ஆனதை ஒட்டி வெளியான பத்திரிக்கைச் செய்தியை சுட்டிக் காட்டி அமைச்சர் ஜே.பி.நட்டா பதிவிட்டதை மேற்கோள் காட்டி மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வெளியிட்ட டுவிட்டரில் பதிவில், 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் இத்திட்டத்தால் பயன் அடைந்திருப்பதாகவும், இதற்காக இந்திய அரசுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது