மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் வருகின்ற 18 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து தான் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அமமுக மூத்த நிர்வாகிகளும் டிடிவி தினகரன் அவர்களும் ஆலோசித்து வருகின்றார்கள். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவின் கருத்துக்களை கேட்டறிய பெங்களூரு அக்ரஹார சிறையில் அவரை சென்று சந்தித்தனர். பின்பு செய்தியாளர் சந்தித்த டிடிவி தினகரன் மிக விரைவில் வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும், என்றார்.