opposition parties

மம்தா பானர்ஜிக்கு ஆதரவுக் கொடி தூக்கும் கட்சித் தலைவர்கள்!

காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவருக்கு பல கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாசிச பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஆதரவு கொடிகளை காட்டியுள்ளனர்.

பயம் இல்லை எனக்கூறிய மோடி.. நம்மை பார்த்து பயப்படுகிறார்: ஸ்டாலின்

கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் “ஒற்றுமை இந்தியா மாநாடு” என்று பெயரில் நடந்து வருகிறது. மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான், தற்போது எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். நாம் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், ஒன்றுமையாக இணைந்து செயல்பட்டால் மக்கள் விரோத கட்சியான பாஜகவை அகற்றலாம் எனக் கூறினார்.