News today in Tamilnadu

கமல்ஹாசன்-பாரிவேந்தர் சந்திப்பு

Makkal Neethi Maiam: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சில கட்சிகள் கூட்டணி அறிவிப்புகளையும் தொகுதி பங்கீடு களையும் அறிவித்து வருகின்றனர் இந்த வேளையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது இவர்கள் கூட்டணி குறித்து பேசி இருப்பார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை

DMK Lok Sabha Election Manifesto: திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசனை செய்ய உள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் அறிக்கை இன்றே இறுதி செய்யப்பட்டு, மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் தேதி தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது அதிமுக

Lok Sabha Elections 2019: தமிழக மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அதிகாரபூர்வமாக இணைத்துவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமுதிக உடன் அதிமுக தலைமை அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24 ஆம் தேதி, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிடப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அமித் ஷா இன்று தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் அந்த வகையில். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித் ஷா. அரசியல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்க உள்ளார்.

தேமுதிக யார் பக்கம் ? பரபரப்பான அரசியல் களம்

Lok Sabha 2019 Elections: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட ஆரம்பித்து விட்டனர், ஆனால் தேமுதிக இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை கூட வெளியிடவில்லை. தேமுதிக அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் என்றே கூறப்பட்டது, பாஜக, பாமக கூட்டணி அறிவிக்கபட்ட அதே நாளில் தேமுதிக கூட்டணியும் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கபட்டது ஆனால் அன்று தேமுதிகவுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட வில்லை, விஜயகாந்த் வீட்டிற்க்கு சென்ற மத்திய அமைச்சர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நட்த்தினார், ஆனால் தேமுதிக சார்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக தெரிகிறது, அதில் பாமாகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்படும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது, ஆனால் அதனை அதிமுக ஏற்று கொள்ள தயாராக இல்லை. மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் ஏற்கனவே 12 தொகுதிகளை பாமகவுக்கும் பாஜகவுக்கும் கொடுக்கப்பட்டு விட்ட்து, மேலும் 7 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்தால், அதிமுகவுக்கு 21 தொகுதிகளாக குறையும், மேலும் தாமாக போன்ற கட்சிகள் வரும் சூழலில் அவர்களுக்கும் ஒரு சில தொகுதிகளில் ஒதுக்கபட வேண்டும்,

இறுதியில் அதிமுகவிற்க்கு குறைவான தொகுதிகளே கிடைக்கும், இதனை கருத்தில் கொண்டே அதிமுக அதிக தொகுதிகளே கொடுக்க மறுக்கிறது. அதிமுக தொண்டர்களும் இதனை விரும்ப மாட்டார்கள்,,

அதிமுக நிச்சயமாக குறைந்த பட்சம் 23 தொகுதிகளில் போட்டியிடும், அப்படியென்றால் இன்னும் 5 தொகுதிகளை மட்டுமே அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுதரும் என தெரிகிறது.

திமுக கூட்டணிக்கு செல்லுமா தேமுதிக ?

பிப்ரவரி 21 காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுகரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்தார், அப்போது அவரது உடநலம் குறித்து விசாரிக்க வந்தேன், மேலும் தமிழக அரசியல் குறித்தும் பேசினோம் என்றார். நிச்சயம் திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவே விஜயகாந்தை சந்தித்தார் என அரசியல் பார்வையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திமுக பொருத்துவரை 10 தொகுதிகளை காங்கிரஸ் விட்டு கொடுத்துள்ளது, மேலும் அவர்களிடம் 30 தொகுதிகள் உள்ளது, திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் கோரிக்கை ஒரிரு தொகுதிகள் மட்டுமே ஆக தேமுதிக ஒரு வேளை கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு ஐந்து தொகுதிகள் வரை இதுக்கப்பட வாய்ப்புள்ளது.

முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் தேமுதிக

தேமுதிவுக்கு இரு கூட்டணிகளும் அழைப்பு விடுக்கபட்டுள்ளது, எந்த கட்சி அதிக தொகுதிகளை தர தயாரா உள்ளதோ அங்கு தேமுதிக செல்லும் என சிலர் சொல்லப் படுகிறது.

தேமுதிகவின் நோக்கம்

தேமுதிக தமது கட்சியை பலப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது, கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்களவை தேர்தலிலும் படு தோல்வி அடைந்துள்ளது ஆகவே மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்க தேமுதிக முயல்கிறது. அதற்கு ஒரே வழி பலம் பொருந்திய கட்சிகளோடு கூட்டணி வைத்து வெல்லவதே ஒரே வழி…

கமல் மக்கள் நீதி மய்யம் மூலம் ஒரு ஆண்டு காலம் சாதித்தது என்ன?

Makkal Neethi Maiam: எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்துக்கு பிறகு சினமா துறையில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைப்பது கமல் என்னும் மாபெரும் நடிகனே. சினிமா துறையில் பல நடிகர்கள் தன்னுடைய அரசியல் விசிட்டை இப்பொழுது அப்பொழுது என்று இழுத்தடித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் கமல் அதிரடியாக பிப்ரவரி 21 2018 அன்று மதுரையில் தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்கினார்.

பொதுவாக ஜெயலலிதாவிற்கு அடுத்து எந்த நடிகர் அரசியலுக்கு வர முயற்சித்தாலும் அவர்கள் சந்திக்கும் கேள்விகள் பல “அரசியலுக்கு வந்திங்கனா விஜயகாந்த் மாறி ஆகிடுவீங்க, கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிட முடியாது. நீங்க சினிமாவுல அரசியல் பேசறதோட நிறுத்திக்கோங்க” இதே போல் பல கேள்விகளை தினசரி சந்திப்பது உண்டு. இதையெல்லாம் தாண்டி கமல் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு வருடத்தை கடந்துள்ளார்.

ஆரம்பித்த ஒரு வருடத்தில் 8 லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யத்தில் பதிவு செய்துள்ளனர். அதை தவிர்த்து மகளிர் அணி, மாற்று திறனாளிகளுக்கான அணி என ஒவ்வொரு துறைக்கும் தலைவர்களும், மாநில வாரியான பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.

சரி, தன்னுடைய ஒரு ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எந்த மாதிரியான சாதனையை கமல் செய்துள்ளார் என்பதை சிறிதளவு பார்ப்போம்.

பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கியதும் மாதம் முழுவதும் கட்சி உறுப்பினர் சேர்க்கை, மக்களை சந்திப்பது, மாணவர்களை கல்லூரியில் சந்திப்பது என கட்சியை வலுப்படுத்துவதற்கான முழு வேலையை செய்தார்.

மார்ச் மாதம் தன் கட்சி உறுப்பினர்களுக்கான பணி நியமனம், மகளிர் அணியை வலுப்படுத்துதல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான உழவன் விருதுகள் நிகழ்வில் பங்கேற்றார்.

ஏப்ரல் மாதத்தில் கிராம சபை கூட்டதிற்கான முழு வேலைகளிலும் ஈடுபட்டார். பின் விசில் என்ற செயலியையும்
அறிமுகப்படுத்தி, இதில் மக்கள் தங்களுடைய எல்லாவிதமான பிரச்சனைகளை பற்றியும் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்தார்.

மே மாதம் தமிழ்நாட்டேயே அதிர்ச்சி அடைய செய்த தூத்துக்குடி துப்பாக்கிச் சுட்டில் நடந்தவைகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்வையிட்டார். அதன் பின் கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்பிலும் கலந்துகொண்டு காவேரி பிரச்சனையை பற்றி குமாரசுவாமியிடம் முறையிட்டார்.

ஆகஸ்ட் மாதம் கலியாப்பூண்டி, செங்கட்டூர் பாக்கம், நாமிழஞ்சேரி, தீந்துபாளையம் போன்ற பல மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தை அவர்களுடைய கட்சி தொண்டர்கள் மூலம் நடத்தினார். அதே சமயம் கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள் பற்றிய பட்டியலையும் வெளியிட்டு உடனடியாக செப்டம்பர் மாதத்தில் மாநில உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டரையம் நடத்தினார்.

நவம்பர் மாதம் தஞ்சை மாவட்டத்தினுடைய மாபெரும் கஜா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஜனவரி அன்று ஊர்மக்களுக்கு தன்னலம் இன்றி சேவை செய்பவர்களுக்கான சான்றோர் விருதுகளை தன் கட்சியின் மூலம் சிறந்த 11 நபர்களுக்கு கடலூரில் வழங்கினார். தன்னுடைய புதுச்சேரி அமைப்பையும் தொடங்கினார்.

இப்படி ஒரு ஆண்டுக்கான பணிகளை கமல் தன்னுடைய கட்சி தொண்டர்கள் மூலம் செய்துள்ளார்.

இந்த ஒரு ஆண்டு காலத்தில் அவர் செய்த விஷயங்களில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஒவ்வொரு மக்களுக்குமே தங்களுடைய பகுதி பிரச்சனைகளை தீர்மானித்து அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டியது அவசியம் என்பதை கிராம சபைக்கான விழிப்புணர்வு மூலம் மக்களுக்கு
கொண்டு சென்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்புகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருமே அவர்களுடைய வாழ்க்கை போக்கின் வெற்றி, மற்றும் சமூக அக்கறையை கண்டுதான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக கூறியுள்ளார். ஊழல் கட்சிகளிடம் கூட்டணி ஒருபோதும் இருக்காது எனவும் கூறியுள்ளார்.

வலதும் இல்லாமல் இடதும் இல்லாமல் மய்யமாக பயணித்து கொண்டு இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய மக்களவை தேர்தல் ஆட்டத்தை மக்கள் காண காத்துகொண்டு இருக்கின்றனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக

DMK Lok Sabha Election Manifesto: வருகின்ற மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என விரும்பும் மக்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தங்களது யோசனைகளையும், கனவு திட்டங்களையும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் – விஜயகாந்த் இன்று சந்திப்பு

DMDK Vijayakanth: சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியா திரும்பி சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், அவரின் உடல்நலன் குறித்து விசாரிக்க தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று அவருடைய இல்லத்திற்கு செல்கிறார். தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக கடுமையாக முயற்சி செய்து வரும் நிலையில், திமுகவும் தனது பங்கிற்கு முயற்சிகளை முன்வைக்கிறதோ என்ற சந்தேகத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்துகிறது.

திருமாவளவனுக்கு ஒரே தொகுதி

Lok Sabha Elections 2019: திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படும் எனவும் தெரிகிறது. மேலும் அவர் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆவலாக இருப்பதாக தகவல்.

மதிமுக உயர்நிலை குழு பிப்.25ல் கூடுகிறது

Lok Sabha Elections 2019: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார். அதில் மதிமுக சார்பில் மக்களவை தேர்தலுக்காக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விருதுநகர் தொகுதியில் வைகோ மீண்டும் போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது

Makkal Neethi Maiam One Year Completion: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018 பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் தொடங்கினார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதற்காக கட்சிக் கொடிகள் எல்லாம் ஏற்றப்பட்டது. பின்பு மக்களவை தேர்தலில் தான் போட்டியிடுவதாக இல்லை என்றும் கூறியுள்ளார். மக்கள் நீதி மையம் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதால், இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றினார்.

பின் மாலை 3.30 மணி அளவில் வேதாரண்யம் தொகுதியில் உள்ள மீனவர்களுக்கு வலை வழங்க உள்ள கமல்ஹாசன் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் திருவாரூர் தொகுதியில் உரையாற்ற உள்ளார்.

வரும் 24ம் தேதி நெல்லையில் கட்சியின் ஓராண்டு நிறைவிற்காக பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று அவருடைய கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

வருகின்ற மார்ச் 10 அன்று இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாகவும் அவர்களுடைய கட்சியினர் கூறி உள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு வருகிறார். அதன்படி இன்று சென்னை வரும் அவர் தி. நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்பொழுது மகாத்மா காந்தி சிலையையும் திறந்து வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து ஆந்திர செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீடு உறுதியானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதன்படி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மற்ற மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும், தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியிருக்கும் நிலையில், தற்பொழுது திமுக காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருப்பது தமிழகத்தில் காங்கிரஸின் மீதான மக்களின் பார்வை சாதகமாக இருப்பதை கருத்தில் கொண்டு திமுகவால் எடுக்கப்பட்ட முடிவு என்றே சொல்லலாம்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகளை எதிர்த்து போட்டியிட்டு வெல்ல திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குளறுபாடுகளும் மன கசப்புகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். அதை உணர்ந்திருக்கும் திமுக தொகுதி பங்கீட்டில் காங்கிரஸிற்கு போதும் என்ற அளவிற்கு அள்ளி வழங்கியிருக்கிறது.

காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக

Lok Sabha Elections 2019: காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகி உள்ள கூட்டணி ஒப்பந்தப்படி, மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம் பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மதுரையில் தேவர் சமூகத்தினர் போராட்டம்

Madurai: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் 7 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரின் வரலாற்றை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிப்பாளையத்தில் தேவர் சமுதாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அனைத்து கடைகளும் அடைக்க பட்டிருக்கும் நிலையில்அண்ணாநிலையம், பெரியார் நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபட சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக தகவல்

Lok Sabha Elections 2019: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அதில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் போட்டியிடும் எனவும் அதில் போட்டியிட்டு தற்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை தோற்கடிப்போம் எனவும் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த 10 தொகுதிகளில் நிச்சயம் காங்கிரஸ் கன்னியாகுமரியில் போட்டியிடும் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் தகவல்.

ஜெ.வின் ஆன்மா மன்னிக்காது கருணாஸ் பேட்டி

MLA Karunas:முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் கொள்கை தனித்துப் போட்டியிடுவதே. ஆனால் தற்போதைய அதிமுகவினர் அதனை மறந்து பாஜக பாமக உடன் கூட்டணி அமைத்திருப்பது, ஜெ.வின் ஆன்மா கூட அவர்களை மன்னிக்காது என விமர்சித்துள்ளார் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்.

கூட்டணியில் இருந்து வெளியேறினார் தமிமுன் அன்சாரி

Lok Sabha Election 2019 Latest News:  அதிமுகவின் தோழமை கட்சிகளாக இருந்துவந்தது மனிதநேய ஜனநாயக கட்சி ஆனால் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். இனி அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என தமிமுன் அன்சாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Election 2019 Tamil Nadu:  மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்த விவரம்

பாமக – 7
பாஜக 5

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.

இணைந்தது பாமக

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

கைகோர்த்த பாஜக

ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?

இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

திமுக கூட்டணிக்கு சவாலா ?

இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.

யாருக்கு எந்த தொகுதிகள் ?

அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?

மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.

Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

Lok Sabha Election 2019 Latest News & Updates:  அதிமுக தலையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது, இதனை திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர், கொள்ளைக்கு முரணான கூட்டணி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை “ இது எதிரிகளை வீழ்த்தும் கூட்டணியே தவிர, கொள்கைக்கான கூட்டணி அல்ல’ என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

Lok Sabha Election 2019 Latest News: எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

காங்கிரஸ்க்கு 10 தொகுதியா ?

Breaking News Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, தொகுதி பங்கீடு பொறுத்தவரை காங்கிரஸ்க்கு 8 தொகுதி வழங்க தயார் என திமுக தலைமை அறிவித்திருந்தது, ஆனால் காங்கிரஸ் இரட்டை இலக்கில் தொகுதிகளில் கேட்டது, நிறைவாக 10 தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ்கே தரப்படும் என தெரிகிறது, மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளது.

Lok Sabha Elections 2019 : பியூஷ் கோயலுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

Lok Sabha Election 2019 Alliance: இன்று காலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, பாமகவிற்கு 7 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஸ், ஆகியோர் சந்திப்பு நடைபெறுகிறது, பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.

Chennai News Today: CTS நிறுவன ஊழலில் அதிமுகவிற்கு தொடர்பு

Chennai News Today: சென்னையில் சி டி எஸ் நிறுவனத்திடம் கட்டிடம், மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற அதிமுக அரசு 26 கோடி லஞ்சம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுவிட்டன. அதிமுக அரசின் இந்த இமாலய ஊழல் 2012 முதல் 2016 ஆம் ஆண்டிற்குள் நடந்துள்ளது. எனவே தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து இந்த ஊழலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Lok Sabha Elections 2019 : உறுதியானது அதிமுக பாமக கூட்டணி

Lok Sabha Election AIADMK – PMK Alliance: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாமாகவும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாமகவிற்கு என துணை முதல்வர் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடக்க இருக்கும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Makkal Needhi Maiam: எங்களை பார்த்து காப்பி அடிக்கிறார்கள் – சீறும் கமல்

Makkal Needhi Maiam Latest News: மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஓன்றில் பேசிய கமல் 25 வருடமாக இவர்களுக்கு கிராம சபை கூட்டம் இருப்பது தெரியாமல் போனது ஏன். எங்கள் கட்சி நடத்தியதை பார்த்து காப்பி அடித்துள்ளனர், என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரை கமல் விமர்சித்துள்ளார்.

AIADMK News in Tamil- இலை கட்சியில் சலசலப்பு

மக்களவை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்கு தம்பிதுரை கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோருக்கும் அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை எனவும் கூட்டணி அமைந்தால் எங்கள் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே அரசிற்கு பெருமான்மை இல்லாத நிலையில் ஆதரவை திரும்ப பெறுவோம் என அவர்கள் கூறியிருபப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Makkal Needhi Maiam: நான் சட்டையை கிழிக்க மாட்டேன் கமல் கிண்டல் பேச்சு

Makkal Needhi Maiam Latest News: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் சட்டமன்றத்தில் எனது சட்டயை கிழிக்க மாட்டேன் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படியே கிழிந்தாலும் சட்டையை மாற்றிவிட்டு தான் வெளியே வருவேன் என்றார் கமல். இரண்டு ஆண்டுகள் முன்னர் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து விட்டதாக கிழிந்த சட்டையோடு ஸ்டாலின் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pulwama Attack: புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் இறக்குமதிக்கு சுங்க வரியை அதிகரித்தது இந்தியா

Pulwama Attack: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்- இ- முகமது என்கின்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீதான சுங்க வரியை இந்தியா அரசு 200% உயர்த்தியுள்ளது. இது உடனே அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Lok Sabha Elections 2019: நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது

Rajinikanth won’t contest 2019 Lok Sabha elections: இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு” என்றும் கூறியுள்ளார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை; எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னுடைய படம் மற்றும் மன்றத்தின் கொடியை வைத்து எந்த கட்சியும் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார்.

Jayalalitha Death News in Tamil: ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம் – தம்பி துரை அதிரடி

Jayalalitha Death News in Tamil: கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் தம்பி துரை, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு திமுக தான் காரணம். அவர்கள் தொடர்ந்த வழக்கினால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் இறந்து விட்டார். எனவே அதற்கு காரணமான திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்றும் கூறினார்.

Tamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற கனிமொழி

Tamil Nadu DMK News: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக கனிமொழி களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அங்கு தேர்தல் வேலைகளை கவனிக்கவும் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் நேற்று மாலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கியதும் கட்சி தலைமையிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு வந்த விமானத்திலேயே சென்னை திரும்பிய அவர் பிறகு டெல்லிக்கு விரைந்தார்.

அனைத்து கட்சி கூட்டம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை ஒரு அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.

திமுக சார்பில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு க ஸ்டாலின் கூறியதன் பெயரில் கனிமொழி மற்றும் டி ஆர் பாலு ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

இதையடுத்து நடைபெற்ற அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் “தீவிரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினருக்கு உதவியாக தோளோடு தோள் நிற்போம்; நாட்டின் ஒற்றுமையையும் நேர்மையையும் காப்போம்” என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உறுதிமொழி எடுத்தனர்.

Lok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா

Lok Sabha Election Alliance in Tamil Nadu: தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில கட்சிகளோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை  துவங்கியுள்ளது பாஜக. தமிழக அரசியலை பெருத்தவரையில் பாஜக ஒற்றரை இலக்கு வாக்கு வங்கியையே பெற்றுள்ளது, தமிழகத்தில் நடந்த கடைசி தேர்தலான ஆர்.கே நகர் தேர்தலில் நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளை பெற்றது பாஜக, தமிழகத்தில் தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவோடு கூட்டணி தொடர்பாக சில தினங்களாகாவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக-பாஜகவோடு மேலும் சில கட்சிகளும் சேரும் என்றே பேசப்பட்டது. அண்மையில் பாமக இளைகஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார், மேலும் தேமுதிக சார்பில் சில கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று அறிவிக்கப்பட்டது, அதிமுக தரப்பில் பேசிய வைத்தியலிங்கம் கூறியதாவது ‘’ பாமக, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம்” என்றார். இந்த தருணத்தில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அமித்ஷா தமிழகம் வந்த அதே நாளில் தான் மத்திய அமைச்சர் பி்யுஷ் கோயலும் சென்னை விரைந்தார். தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர், இது அவர்கள் கூட்டணியை தொடர்பான செய்தி உறுதியானது, ஆகவே அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதில் அதிமுகவையும் இதர மாநில கட்சிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக இறக்கியுள்ளதாக தெரிகிறது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தால் தொகுதி பங்கீடு பற்றிய கேள்வி ஏழும், அதற்கு பதில் தரும் விதமாக சமூக வலைதளத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகவலின் அடிப்படையில்

அதிமுக  24 தொகுதிகளும்

பாஜக     8    தொகுதிகளும்

பாமக   4     தொகுதிகளும்

தேமுதிக  4  தொகுதிகளும்

போட்டியிடலாம் என்றே கூறப்படுகிறது, இருப்பினும் இவைகளில் எந்த கட்சியும் கூட்டணி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப் படும் என்றே றப்படுகிறது. மேலும் தமிழக மக்களிடையே இந்த கூட்டணி வரவேற்பை பெருமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகளே சரியான பதிலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Election Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், அதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி இடத்துக்கு தற்போது சுஷில் சந்திராவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தற்போது தேர்தல் ஆணையராக சுனில் அரோராவும் இரண்டு தேர்தல் ஆணையர்களாக சுசில் சந்திராவும்,அசோக் ஆகியோரும் இருப்பர்.

Lok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ம.தி.மு.க. நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட வேண்டும். மேலும் பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தேர்தலில் 125 இடங்களை மட்டுமே பாஜகவால் வெல்லமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்றார்.

Tamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இம்முறை தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் பிரம்மாண்டமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழக மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சியை கொடுப்போம் என உறுதியளித்தார். திமுக, காங்கிரஸ் தவிர இதர கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும், எந்தெந்த கட்சி என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்,

Lok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி – கனிமொழி

டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய திமுக எம் பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கஜா புயலால் தமிழகமே தள்ளாடிய பொழுது வராத மோடி மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இப்பொழுது திரும்ப திரும்ப வருகிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று கூறிய அவர்; திமுக சார்பில் தான் தேர்தலில் நிற்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுகவை அதிரடியாக தாக்கிய அமித் ஷா

நேற்று ஈரோட்டில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதல்முறையாக திமுகவை குறிவைத்து கடுமையாக சாடியுள்ளார். “எங்களுக்கு எதிராக கொள்ளை கூட்டணி அமைந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கான கூட்டணி இல்லை; ஊழலுக்கான கூட்டணி” என்று கூறினார். மேலும் மக்களின் விருப்பத்தை கேட்டே பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என்றும் கூறினார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்.பேச்சு, நாடகம், வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி என பல பிரிவுகளில் வெற்றி வெற்றி பள்ளியில் தனித்துவமான மாணவியாக இருந்தார். மேலும் கோகோ மற்றும் கைப்பந்து அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி அமித்ஷா விமர்சனம்

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்க இருக்கும் தருணத்தில், தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை துவங்கியுள்ளது பாஜக, பிரதமர் மோடி உட்பட தேசிய பாஜக தலைவர்கள் அனைவரும் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள், அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார், தற்போது அமைந்துள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை என விமர்சித்த அவர் அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

AIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் ராமசாமி, அதிமுக வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பினார். அப்போது அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தயார் என்றால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயார் என கூறினார். மேலும் 1967 முதல் காங்கிரஸ் அதிமுக,திமுக மீது தான் சவாரி செய்து வருகிறது என விமர்சித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் பார்வையாளர்கள் ”இது போன்ற கருத்துகள் எழுவது பெரிதல்ல, எந்த கட்சியும் தனித்து நிற்கும் சூழல் இன்று இல்லை”.

Road Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இன்னும் 2 வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து பாஜக தலைவரும் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் கட்சியின் செயல்பாடுகளை பலப்படுத்தும் வகையில் நாளை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பா.ஜ.க வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றுகிறார்.

Tamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழகத்தில் அந்தயோத்யா அட்டைதாரர்கள் 18 லட்சம் பேர் மட்டுமே அப்படி இருக்கையில் 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளது என்று தமிழக அரசு கூறுவது எப்படி சரியாகும்? தேர்தலை கருத்தில் கொண்டு இந்த எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரித்துள்ளது. எனவே இத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

DMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

பா.ஜ.க மற்றும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதை அடுத்து நாளை மறுநாள் காலை 8.30 மணி அளவில் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னைக்கு வந்த பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amit Shah In Tamil Nadu: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா ஈரோட்டிற்கு வருகிறார். ஈரோட்டில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் நெசவாளர்களையும் சந்திக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

நீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங்

இன்று மக்களவையில் சமாஜ்வாதியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் உரை நிகழ்த்தினார், அப்போது மக்களவையில் உள்ள அனைவருமே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார், அதன்பின்னர் பிரதமர் மோடியை பார்த்து மீண்டும் நீங்களே பிரதமதராக வேண்டும், என வாழ்த்து தெரிவித்தார். இது அருகில் அமர்ந்திருந்த சோனியா காந்திக்கு பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வரும் தருணத்தில் முலாயம் சிங் இவ்வாறு பேசியிருப்பது தேசிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டெபாசிட் இழந்த தி.மு.க என்று நாங்கள் அழைக்கலாமா? – தமிழிசை சௌந்தர்ராஜன்

பா.ஜ.க. நோட்டா உடன் தான் போட்டி போடும் என்று கி வீரமணி கூறியதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், “தேர்தலையே சந்திக்காத வீரமணி அவ்வாறு சொல்வதற்கு தகுதி அற்றவர். ஆர் கே நகர் தொகுதியில் தி.மு.க டெபாசிட் இழந்தது. அப்படி என்றால் தி.மு.க டெபாசிட் இழந்த கட்சி என்று நாங்கள் அழைக்கலாமா?” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

2019 Lok Sabha Elections Tamilnadu: வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது, இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டணி அறிவிப்பு வெளியாகும் இந்த சமயத்திலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார், அண்மையில் மக்களவையில் பேசிய தம்பிதுரை ஜி.எஸ்.டி வரி தொடர்பாக மாநில அரசிற்கு வர வேண்டிய தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், அதனை பெற பிச்சை எடுப்பது போல் கேட்டு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாஜகவோடு நட்பும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்ற அதிரடி பதிலையும் கொடுத்துள்ளார், இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் தம்பிதுரைக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தெரிகிறது. இதனை அதிமுக தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி, ஒருவேளை கூட்டணி அறிவிப்பு வெளியானதும் தனது அதிருப்தியை தெரிவிப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. இதனை தவிர்க்க அதிமுக தலைமை அவரை சமாதான செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது தம்பிதுரை கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர், வருகின்ற தேர்தலில் அவர் அதே தொகுதியில் போட்டியிடலாம். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கிட்டதட்ட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் என்பதால் அதே தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?

2019 Lok Sabha Elections Tamilnadu: பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று ஓரிரு மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் தேசிய செயலர் முரளிதர ராவ் “தமிழகத்தில் கடந்த தேர்தலை எப்படி கூட்டணியோடு அணுகினோமோ அதேபோல் பலம் பொருந்திய கூட்டணியை அமைத்து இந்த தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

அதோடு நிற்காமல் தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகி விட்டதாக தெரிவித்தார், இதனால் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும், மேலும் பாஜக அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனவும் கூறினார்.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

ஆனால் அவர் பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெரும் என்பது குறித்து பேசவில்லை. பாஜக தலைவர்கள் சிலர் அதிமுகவோடு தான் கூட்டணி அமையும் என பேசிவருகிறார்கள். மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையை பெருத்தவரையில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி குறித்து இன்னும் முடிவெக்க வில்லை. பாமக இளைஞர் அணி செயலர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அண்மையில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

மேலும் தேமுதிகவும் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பின்னர் அதில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் திமுகவின் மெகா கூட்டணிக்கு நிகரான ஒரு பலம் வாய்ந்த கூட்டணியாக பாஜக கூட்டணி அமையும்.

ஒருவேளை நான்கு கட்சிகளும் ஒர் அணியில் திரளும் பட்சத்தில் தொகுதி பங்கீடு சவாலாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடதக்கது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

பாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?

அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை மாநிலமே எதிர்பார்த்து வரும் நிலையில் கட்சி தலைமை அமைதி காத்து வருகிறது. இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், “பாஜக, பாமக மற்றும் தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் நில அதிர்வு – முழு விவரம்

Chennai Earthquake News: சென்னையில் நேற்றைய காலை எப்போதும் போல இல்லை. படு பிஸியாக அவரவர் படிப்பிடங்களை நோக்கியும் அலுவலகங்களை நோக்கியும் போய்க்கொண்டிருந்த மக்கள் ஓரிரு வினாடிகள் பீதியில் உறைந்து போனார்கள்.

காலை 7.02 மணியளவில் சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர்அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ள இந்த அதிர்வு 2-3 வினாடிகள் மட்டுமே நீடித்துள்ளது. குறிப்பாக தியாகராய நகர், போரூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் இந்த நில அதிர்வை மக்கள் அதிகம் உணர்ந்துள்ளனர்.

சென்னையிலிருந்து 609 கிலோமீட்டர் தொலைவில் மத்திய மேற்கு வங்க கடலுக்குள் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்துள்ளது. அந்தமான் மற்றும் சென்னையில் இதன் தாக்கம் பதிவாகியுள்ளது. வானிலை மையத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

உயிர் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனினும் இந்த திடீர் நில அதிர்வு சென்னை மக்களை திடுக்கிட வைத்து விட்டது என்றே சொல்லலாம்.

நில அதிர்வு குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதால் வெளி ஊரில் உள்ள மக்கள், சென்னையில் வசிக்கும் தங்களது சொந்தங்களின் நலன் பற்றி பயந்து போயினர். அவரவர் சொந்தபந்தங்களின் பாதுகாப்பு பற்றி விசாரிப்பதிலேயே தொடங்கியது நேற்றைய நாள். இன்றும் மக்கள் காலை சற்று பீதியுடனேயே தங்கள் அன்றாட வேலைகளை தொடங்கியுள்ளனர்.

Chennai Earthquake News – சென்னையில் நில அதிர்வு

ஹஜ் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

2019 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு தமிழகத்திற்கு 3534 இடங்களை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிலையில் இதுவரை ஹஜ் பயணத்திற்காக 6379 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் யாத்திரையில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளதால் கூடுதலாக 1,500 ஹஜ் பயண ஒதுக்கீட்டை அளிக்குமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

இன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் – கண்கலங்கிய வைகோ

கல்லூரி மாணவர்களிடையே காந்தி என்கின்ற தலைப்பில் பேசிய வைகோ, காந்தியின் நினைவு நாளில் அவருடைய உருவ பொம்மை பூஜா பாண்டே என்பவரால் சுட்டு தீயில் எரித்து கொண்டாடப்பட்டதை நினைவுகூர்ந்து கண் கலங்கினார். நா தழுதழுக்க தொடர்ந்து பேசிய அவர், நான் ஒரு போராளி. எனக்கு தோல்வியே கிடையாது. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பாற்ற தொடர்ந்து போராடுவேன். நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும் தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

இன்று கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டக் கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ப்பு

கடந்த மாதம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூடுகின்றன. இன்று மதியம் நடக்க இருக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, தேவகவுடா, பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் சார்பில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

தம்பிதுரை கருத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவையில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பேசுகையில் மாநில அரசின் நிதியை பெற மாநில அரசுகள் மத்திய அரசிடம் பிச்சை எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். நேற்று சட்டமன்றத்தில் பேசிய ஜெயக்குமார் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் சதி நடக்கிறது – ராமதாஸ்

பேரறிவாளன் நளினி முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 151 நாட்கள் ஆகிவிட்டன. எனினும் இந்த விஷயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு இருப்பது நியாயமில்லை. அதில் ஏதோ சதி இருப்பதாகத் தோன்றுகிறது. ஒருபுறம் அற்புதம்மாள் நீதி கேட்கும் பயணத்தை மேற்கொள்ள மறுபுறம் சிறையில் நளினியும் முருகனும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தேர்தல் யுக்திகளை கையாளுகிறதா அதிமுக ?

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளர். தமிழகத்தை பொருத்தவரை அனைத்து வர்கத்தை சார்ந்தவரும் உள்ளனர். இன்றைய சமூகத்தில் பல்வேறு வளர்ச்சிகளை நாம் அணுதினமும் பார்க்கிறோம், ஆனால் அதனை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களால் ருசிக்கமுடியாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நிதிநிலைமை. இன்றைய கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு நிகராக வளர்ந்து வருகிறது. மருத்துவமும் செலவும் இமாலய உயரத்தை தொட்டுவிடுகிறது. இதன் விளைவாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் ஏழை தொழிலாளர்களின் துயரை மொத்தமாக நீக்கிவிடாது என்றாலும் அவர்களுக்கு அறுதலாக இருக்கும் என்பதே உண்மை. இந்த திட்டத்தின் வாயிலாக வருடத்திற்கு 24,000 ரூபாய் என்பது ஏழை தொழிலாளர்களுக்கு மிகவும் தேவையான ஓன்றாக இருக்கும். ஒரு கிராமப்புற குழந்தையின் கல்வி செலவுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் 60 லட்சம் தொழிலாளர்கள் நன்மை அடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது நல்ல திட்டம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை, இருப்பினும் அதனை நடைமுறைபடுத்த இது சரியான காலம்தானா என்ற கேள்விகளை எழுப்புகிறது. அண்மையில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அப்போது தேர்தலை கருத்தில் கொண்டு தான் அதிமுக சில திட்டங்களை அறிவித்துள்ளது என்ற அதே குற்றச்சாட்டு இதற்க்கும் பொருந்தும். ஏழை தொழிலாளர்களுக்கு ஊக்க தொகை கொடுப்பது பெருமை அல்ல, ஏழை தொழிலாளர்களை உயர்த்த ஒரு திட்டம் தீட்டாதது ஏன் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. இந்த 2000 ரூபாயும் 60 லட்சம் தொழிலாளர்களை சென்று அடையுமா? இந்த திட்டம் எப்போது அமல் படுத்தப்படும், என்ற பதிலுக்காக காத்திருக்கிறார்கள் ஏழை தொழிலாளர்கள். பொதுவாகவே தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் வரும் சூழலில் இலவச திட்டங்கள், கடன் ரத்து போன்று திட்டங்களை அறிவித்து மக்களை கவர்வது தமிழக அரசியலில் வழக்கமான ஒன்று தான்.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு

பிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு அரசு விழாவிலும் மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் வெளியான அறிக்கையின்படி பிரதமரின் வருகை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் நிலநடுக்கம்

சென்னைக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் பத்து கிலோமீட்டர் நிலத்தடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை கேளம்பாக்கம் சைதாப்பேட்டை டி நகர் டைடல் பார்க் போன்ற பகுதிகளில் ஒரு சில நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

பாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை

மக்களவை தேர்தலினை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள், திமுக காங்கிரஸ் கட்சிகளை பொருத்தவரை அவர்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பாஜகவை பொருத்தளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை என்று விமர்சித்துள்ளார். அவர்களது அராஜக ஆட்சியினை அகற்ற முயற்சிப்போம் என்றார்.

லோக்சபா தேர்தல் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி – ராகுல் காந்தி

லக்னோவில் நடந்த பேரணியின் முடிவில் பேசிய ராகுல் காந்தி, “வருகின்ற மக்களவை தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி” என்று கூறியுள்ளார். பா.ஜ.க அரசு, தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் அவர்களின் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூறிய அவர், ஏழை எளிய மக்களை ஆளும் அரசு மறந்து விட்டதாக கூறினார். மேலும் மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்த மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொகுதி பங்கீட்டில் இழுபறியா ?

மக்களவை தேர்தல் களம் தமிழகத்தில் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது, அதனை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், இந்த மாதம் ராகுல் காந்தியும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார், அது ஒருபக்கம் இருந்தாலும் திரைக்கு பின்னர் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியே கூட்டணியோடு தான் தேர்தலில் ஈடுபட உள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கூட்டணியோடு தான் தேர்தலை அணுக இருக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எளிதில் நிறைவு பெறாததற்கு, தொகுதி பங்கீடும் ஒரு இடையூறாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, முந்தைய தேர்தல் சமயத்தில் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லாததனால் கூட்டணியே முறிவடைந்துள்ளது. எடுத்துகாட்டாக 2016 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவும் தமிழ்மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்தை நல்ல முடிவு எட்டப்பட்டாலும் தொகுதிகள் குறைவு என்பதற்காக வெளியேறிய தமிழ்மாநில காங்கிரஸ் மக்கள் நலக் கூட்டணியோடு இணைத்து கொண்டது. அதே நிலைதான் தமிழகத்திலும் நிலவுவது போல் தெரிகிறது.

திமுக பொருத்தவரை இம்முறை மெகா கூட்டணி அமையும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது.. அதிமுகவை பொருத்தவரை தேசிய கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறினாலும் பாஜகவுடனான கூட்டணிக்கே அதிக வாய்ப்பு என்பதை அரசியல் நிகழ்வுகள் தெரியப்படுத்துகிறது

இன்னும் சில

தமிழக கட்சிகளில் இன்னும் சில கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ் மேலும் சில உள்ளூர் கட்சிகளும் முடிவை அறிவிக்காமல் இருக்கின்றன.

எங்களுக்கு இந்த தொகுதி

பொதுவாகவே தொகுதி பங்கீட்டில ”’எத்தனை தொகுதி” என்பதை விட ”எந்த தொகுதி” என்பதே சலசலப்பை ஏற்படுத்தும், சில கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வரவேற்பு இருக்கும், ஆகையால் அவர்கள் அங்கே போட்டியிட நிர்பந்திப்பது வழக்கம், அதற்கு கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதுபோல் பல்வேறு பிரச்சனைகள் குறுகிய காலத்தில் தலைதூக்கும், இதனை சமாளித்து தேர்தலை சந்திப்பது எளிதல்ல.

தற்போதைய நிலையில் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் தான் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

யார் யாருடன் கூட்டணி ! இன்னும் சில தினங்களில் !

உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைமை உத்திரபிரதேசத்தின் 42 பாராளுமன்றத் தொகுதிகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று அறிவித்தது. இதையடுத்து இன்று கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கும் அவர் ரேபரேலி தொகுதியில் நான்கு நாள் சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வாருங்கள் அனைவரும் சேர்ந்து புது விதமான அரசியலை உருவாக்குவோம் என்று அவர் உத்தரபிரதேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக- பாமக கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாயின. அதனை திமுகவோடு தற்போது ஏற்கனவே கூட்டணிக் கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக எதிர்த்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாமக… திமுகவை ஒழிக்கவும் தயங்காது என்று கூறிய அவர் பாமக சாதியக் கொலைகளை வெளிப்படையாக ஆதரிக்கும் கட்சி என்று சாடினார்.

சென்னையும் சிசி டிவி கேமராக்களும்! பின்னணி என்ன?

Chennai CCTV Cameras: சென்னை நகரம் மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான சி சி டிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. நகரின் பிரதான சாலைகளில் ஒவ்வொரு 50 மீட்டருக்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.அவற்றில் பெருமளவு மக்களால் அவரவர் வீடுகளுக்காகவும், கடைகளுக்காகவும், தெருக்களுக்காகவும் பொறுத்தப்பட்டவை.

சில நிறுவனங்கள் சமூக அக்கறையுடன் தாமாக முன்வந்து பொது இடங்களில் கேமராக்களை பொருத்துவதும் உண்டு. இவ்வாறு பொறுத்த படும் அனைத்து கேமராக்களும் அந்தந்த இடங்களுக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் கண்ட்ரோல் ரூம் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் எங்கேயாவது குற்றங்கள் நடந்தால் அந்த குறிப்பிட்ட வட்டாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி சி டிவி கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கொண்டு குற்றத்திற்கான பின்னணியை காவல் துறையினரால் கண்டறிய முடிகிறது.

சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் இது பற்றி கூறுகையில், “வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு சி சி டிவி கேமராக்களின் தேவை பற்றிய விழிப்புணர்வு சென்னை மக்களிடம் அதிகமாகவே உள்ளது. சி சி டிவி கேமராக்கள் பொறுத்தப்படுவது வழக்கமான பிறகு நகரில் நிகழும் குற்றங்கள் 30% குறைந்துள்ளன. 2012 இல் 792 ஆக இருந்த செயின் பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 2018 இல் 538 ஆக குறைந்துள்ளது.

CCTV Surveillance Camera Footage in Chennai helps Chennai Police Crime Investigation: சென்னையும் சிசி டிவி கேமராக்களும்! பின்னணி என்ன?

கொள்ளை மற்றும் வழிப்பறிகளும் குறைந்துள்ளன. அவ்வப்போது நிகழும் குற்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களும் சில மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தேடி பிடிக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது பொது இடங்களில் கேமரா இருப்பதை உணர்ந்திருப்பதால் “போலீசாரும் மக்களிடையே மரியாதையுடன் நடந்துகொள்கின்றனர்” என்றார்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கிரிமினாலஜி பிரிவினர், கொள்ளை சம்பவங்கள் தொடர்பான தங்களது ஆராய்ச்சிக்காக சில கொள்ளையர்களிடம் பேசியபொழுது, “சி சி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வீடுகளுக்குள் நுழைய நாங்கள் பயப்படுவோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் மக்களுள் சிலர், மூளை முடுக்குகளிலெல்லாம் பொருத்தப்படும் சி சி டிவி கேமராக்களால் தங்களது பிரைவசி பாதிக்கப்படுத்தாக கருதுகின்றனர். குறிப்பாக கடைகளிலும், வேலை நிறுவங்களிலும் பொருத்தப்படும் கேமராக்களால் யாரும் யாரையும் கண்காணிக்க முடியும் என்றும்,அவ்வாறு கண்காணிப்பதால் தெரிய வரும் பர்சனல் விஷயங்களை வைத்து ஒருவர் மற்றொருவரை மிரட்டும் சம்பவங்கள் நிறைய நடந்து உள்ளன என்றும் கூறுகின்றனர்.

CCTV Surveillance Camera Footage in Chennai helps Chennai Police Crime Investigation: சென்னையும் சிசி டிவி கேமராக்களும்! பின்னணி என்ன?

இதற்கு போலீசார் தரப்பில், “மக்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றங்களை தடுக்கவும் தான் நாங்கள் சி சி டிவி கேமராக்கள் பொருத்துவதை பரிந்துரைக்கிறோம். ஆனால் அதில் பதிவாகும் காட்சிகளை வைத்து ஒருவர் மற்றவரை மிரட்டுவது சட்ட ரீதியாக தவறு என்றும் அவ்வாறு நடந்தால் அதற்கு தக்க தண்டனை உண்டு” என்று கூறப்படுகிறது. மேலும், சி சி டிவி கேமராக்கள் வந்த பிறகு போலீசார் தங்களது ரோந்து பணிகளில் சரியாக ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.

“சி சி டிவி கேமராக்கள் ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதற்கான துடக்கம். அதில் பதிவாகும் காட்சிகள் ஒரு விசாரணையின் 50% தீர்வை தான் குடுக்கும். அதற்கு பிறகு தங்களது திறமையை கொண்டு போலீசார் அந்த பிரச்சனைக்கான முழு தீர்வையும் தேடி போவர். தொழில்நுட்பமும் மனித வலிமையையும் சேர்ந்தால் தான் ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். நகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூன்று முதல் நான்கு ரோந்து வாகனங்கள் உள்ளன. நாங்கள் ரோந்து செல்வதை குறைத்துக்கொள்ளவில்லை சி சி டிவி கேமராக்கள் எங்களுக்கு கூடுதல் உதவியாக தான் உள்ளன” என்பது போலீசாரின் பதிலாக உள்ளது.

மக்களை பாதிக்காத வகையில் இந்த தொழில்நுட்பத்தை உபயோகிப்பதில் போலீசாரும், காவல் துறை தங்கள் பணியை முறையே செய்ய தங்களின் ஒத்துழைப்பும் தேவை என்பதை மக்களும் உணர்ந்து ஒரு சீரான சமூகத்தை உருவாக்குவது முக்கியம்.

Chennai Police Crime Investigation Reduced by Chennai People Surveillance Camera Footage : சென்னையும் சிசி டிவி கேமராக்களும்! பின்னணி என்ன?

மோடிக்கு எதிராக கருப்பு கொடி – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது

பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரின் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிமுக தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து வைகோ உள்பட மதிமுக தொண்டர்கள் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்

நேற்று தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே டிவிட்டரில் GO BACK MODI என்ற வாசகம் பிரபலமாகி வந்தது, மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியே நேரடியாக பிரச்சார களத்தில் குதித்துள்ளார். அந்த வகையில் நேற்று திருப்பூரில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார், மேலும் திருப்பூரில் நடைபெற்ற தமிழக அரசின் விழாவிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு திட்டங்களை காணொளி மூலம் அவர் திறந்து வைத்தார், பாஜக பொதுகூட்டதில் பேசிய மோடி காமராஜர் ஆசை பட்ட ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது என்று கூறிப்பிட்டார்

தமிழக அரசியலில் பிரதமர் மோடியின் வருகை எதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு வரலாறே பதில் சொல்லும் பிரதமர் மோடி பல முறை தமிழகம் வந்திருந்தாலும் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் இல்லை என்பதே நிதர்சனம். மக்களவை தேர்தலை நோக்கி நாம் பயணிக்கும் இந்த தருணத்தில் மோடியின் வருகை முக்கியதுவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது, கூட்டணி குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபட்டது, ஆனால் அது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை தமிழக மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் பாஜக அரசு முயற்சித்து வருவதாகவும், தொழிலாளர்கள் நலம் சார்ந்த திட்டங்களை மட்டுமே எங்கள் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது, மேலும் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம் பாதுகாப்பு தளவாடங்களில் நம் நாடு தன்னிறைவு அடைய இரண்டு பாதுகாப்பு பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதில் ஒன்று தமிழகத்தில் தான் அமையவுள்ளது என்றார் மோடி. சகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்கள் பலப்படுத்தப்படும் எனவும், ஊழல் மற்றும் தவறான செயல்ளை எங்கள் அரசு தடுத்து நிறுத்தும் என்றார் பிரதமர் மோடி. குறிப்பாக சாலை மேம்பாடுகளில் அரசு கவனம் செலுத்தும் எனவும் உறுதியளித்தார்

காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளது காங்கிரஸ். நாட்டின் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டாமல் தற்போதிய ராணுவத்தை சிறுமைபடுத்தும் வகையிலும் பேசிவருகிறது காங்கிரஸ் கட்சி. பிரச்சாரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினரின் கேலி பேச்சுகளை கேட்க மக்கள் தயாராக இல்லை என்று காங்கிரஸை விமர்சித்தார், மேலும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு இப்போது பேக்கேஜ் முறையில் ஒரு குடும்பம் ஜாமின் வாங்கி வருகிறது என மறைமுகமாக பா.சிதம்பரத்தை விமர்சித்தார். பிரதமரின் தமிழகம் வருகை பாஜகவின் வாக்கு வங்கியில் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தேர்தல் முடிவுகள் தான் தெரியப்படுத்தும்.

அடுத்தக்கட்டமாக பிப்ரவரி 19 அன்று பிரதமர் பிரச்சாரத்திற்க்காக கன்னியாக்குமரி செல்கிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.