Naam Tamilar Katchi

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னம் முடக்கம்

நாம் தமிழர் கட்சி இதுவரை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது ஆனால் போதிய வாக்கு சதவீதம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான புதிய சின்னத்தை கேட்டு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கமலை விட நாங்கள் மூத்தவர்கள் – சீமான்

Lok Sabha Elections 2019: நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூட்டணி பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். “கூட்டணிக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருப்பது அவரது எதிர்பார்ப்பு, விருப்பம். அரசியல் களத்தில் ஓராண்டு நிறைவு செய்துள்ள அவரை விட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றி வரும் நாங்கள்தான் மூத்தவர்கள். ஆட்சியின் செயற்பாட்டு வரைவை வெளியிட்டு 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலும் 20 பெண்கள் 20 ஆண்கள் போட்டியிடுகின்றனர். எனவே அவர்தான் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் ” மேலும் தமிழக மக்கள் பாஜக கூட்டணியை 200% நிராகரிப்பார்கள் நிராகரிக்கவைப்போம். அதற்காகவாவது நாங்கள் தேர்தல் களத்தில் போராடுவோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிடுவோம் என்றார்.