Microsoft

மைக்ரோசாப்ட் பிங் சர்ச் இன்ஜினுக்கு சீனாவில் தடை விதிப்பு

சீனா அரசுத்துறை உத்தரவுகளை அணுக முடியாமல் இருப்பதால், மைக்ரோசாப்ட் பிங்க் சர்ச் இன்ஜின் (Bing Search Engine) சீனாவில் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெளியான செய்தியில் சீனா அரசால் நடத்தப்பட்டு வரும் யூனிகாம் தொலைதொடர்பு நிறுவனம், இந்த சர்ச் இன்ஜினை அரசு பிளாக் செய்ய உத்தரவிட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யாகூ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெப்சைட்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பர்க்கர் வாங்கிய பில்கேட்ஸ்

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பர்கர் வாங்குவதற்காக ஹோட்டல் முன் வரிசையில் நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பில்கேட்சிடம் கடைக்காரர் கேட்டதற்கு, தன்னிடம் ஏராளமாக பணம் இருந்தும் தான் விரும்பிய சுதந்திரம் இல்லை என்று கூறிய பில்கேட்ஸ் தற்போது அதனை விரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். கடையின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் பில்கேட்சுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார்.

எந்த கணினி-களில் IRCTC வலைதளம் இயங்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப IRCTC-யும் தனது வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் தனது வலைதளத்தினை மேம்படுத்தி வருகின்றது. இந்த புதுதளம் Windows XP மற்றும் Windows Server 2003 இயங்குதளங்களில் செயல்படாது என்பதால், வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. தற்போதும் சில அரசு அலுவலகங்களில் Windows XP இயங்குதளம் கொண்ட கணினிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பாராட்டை பெற்ற பிரதமர் மோடியின் இன்சூரன்ஸ் திட்டம்

மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் ஆனதை ஒட்டி வெளியான பத்திரிக்கைச் செய்தியை சுட்டிக் காட்டி அமைச்சர் ஜே.பி.நட்டா பதிவிட்டதை மேற்கோள் காட்டி மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வெளியிட்ட டுவிட்டரில் பதிவில், 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் இத்திட்டத்தால் பயன் அடைந்திருப்பதாகவும், இதற்காக இந்திய அரசுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது