mdmk chief vaiko

சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது, தமிழகம் முழுவதிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அங்கு செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை கருப்பு கொடி போராட்டம் நடத்தபோவதில்லை, வைகோ தகவல்

Vaiko black flag protest: நரேந்திர மோடி மக்களவை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க நாளை சென்னை வருகிறார், அதில் அதிமுக, பாமக போன்ற கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். நாளை மோடியை எதிர்த்து கருப்பு கொடி காட்ட மாட்டோம் என வைகோ அறிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரியில் அரசு விழாவில் பங்கேற்க்க மோடி வந்ததால் தான் மதிமுக கருப்பு கொடி காட்டியதாகவும் நாளை அவர் பிரச்சாரம் செய்யதான் வருகிறார் என்பதால் நாங்கள் கருப்பு கொடி காட்ட போவதில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ கருப்புக்கொடி போராட்டம்

Vaiko black flag protest: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமாரி வருகிறார் அவர் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாகர்கோவில் பகுதியில் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் தமிழகத்தில் எந்த இடத்திற்கு பிரதமர் வந்தாலும் அவரை எதிர்த்து கருப்பு கொடி காட்டுவோம் என உறுதியாக கூறியுள்ளார் பிரதமர் வரும் போது யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என ஏற்கனவே பொன்ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் வைகோ ஆவேசம்

Vaiko black flag protest: தேர்தல் வருவதால் மட்டுமே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் நாங்கள் நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் என ஆவேசமாக பேசியுள்ளார். சமீபத்தில் பொன்ராதாகிருஷ்ணன் யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறாம் தேதி வண்டலூர் அருகே பாஜக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது மதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவார்கள் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

வைகோவுக்கு பிரச்சாரம் செய்வேன் நாஞ்சில் சம்பத் கருத்து

MDMK தமிழக அரசியலில் 32 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ஆரம்பகாலத்தில் திமுகவிலும் பின்பு மதிமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் பணியாற்றியுள்ளார். அண்மையில் தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சென்ற அவர் வரும் மக்களவைத் தேர்தலில் வைகோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

இன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் – கண்கலங்கிய வைகோ

கல்லூரி மாணவர்களிடையே காந்தி என்கின்ற தலைப்பில் பேசிய வைகோ, காந்தியின் நினைவு நாளில் அவருடைய உருவ பொம்மை பூஜா பாண்டே என்பவரால் சுட்டு தீயில் எரித்து கொண்டாடப்பட்டதை நினைவுகூர்ந்து கண் கலங்கினார். நா தழுதழுக்க தொடர்ந்து பேசிய அவர், நான் ஒரு போராளி. எனக்கு தோல்வியே கிடையாது. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பாற்ற தொடர்ந்து போராடுவேன். நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும் தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

மோடிக்கு எதிராக கருப்பு கொடி – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது

பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரின் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிமுக தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து வைகோ உள்பட மதிமுக தொண்டர்கள் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா ? வைகோவிற்கு ஹச்.ராஜா சவால்

பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார் வைகோ, அத்தோடு பிரதமரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹச் ராஜா ”வைகோவால் கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா” சவால் விடுத்துள்ளார்.