Mamata Banerjee

AAP Delhi Breaking News: டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் – ஓர் சிறப்பு பார்வை

AAP Delhi Breaking News:எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து மோடி அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்துவது வாடிக்கையாகி விட்டது

சில மாதங்களுக்கு முன்பு அனைத்து எதிர்கட்சிகளையும் கூட்டி பொதுக்கூட்டம் ஒன்றை ராகுல் காந்தி நடத்தினார்.

அதையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜீ 22 எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் தானும் இப்படி ஒரு பொதுக்கூட்டத்தை டெல்லியில் நடத்த போவதாக கூறினார்.

அதன்படி டெல்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று மதியம் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மம்தாவின் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தி மு க எம் பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜீ, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ம.ஜ.த தேசிய தலைவர் தேவ கவுடா, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

மம்தா பானர்ஜீ பேசுகையில், “பா ஜ க ஆட்சியில் டெமோகிரசி மோடிகிரசி ஆகிவிட்டது. இன்று தான் மக்களவையில் மோடிக்கு கடைசி நாள். இன்னும் 20 நாட்கள் தான்; அதற்கு பிறகு அவரால் ஒன்றும் செய்ய முடியாது. மேற்கு வங்கத்தில் என்ன முயற்சிகள் செய்தாலும் மோடி அரசு கால்பதிக்க முடியாது. அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெல்லும்.

கண்ணாடியில் உங்களையே பாருங்கள்; ராவணனுக்கும் 56 இன்ச் மார்பு தான் இருந்தது. ஷோலே திரைப்படத்தில் தூங்கிவிடு இல்லை என்றால் கஃபர் சிங்க் வந்துவிடுவான் என்றொரு வசனம் உண்டு. இந்தியாவிற்கு மோடி தான் கஃபர் சிங். அவரை வைத்து தான் அந்த வசனம் ஊடகங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தற்பொழுது சொல்லப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “ மோடி ஜி நீங்கள் இந்தியாவின் பிரதமர். பாகிஸ்தானிற்கு அல்ல. எந்த இந்திய பிரதமராவது டெல்லியையும் கொல்கத்தாவையும் பாதிப்பிற்குள்ளாக்க நினைப்பாரா?” என்று கூறினார்.

பரூக் அப்துல்லா பேசுகையில், “கடவுள் ராமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கு மட்டும் தான் சொந்தமானவரா? அவர் அனைவருக்கும் பொதுவானவர். உங்கள் மறைவிற்கு பின் நீங்கள் அவரிடம் செல்லும் பொழுது அவர் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் மோடி அரசுக்கு எதிராக இவ்வாறு எதிர்க்கட்சிகள் கை கோர்த்திருப்பது பா ஜ க அரசிற்கு சருக்கலாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், ரபேல் விமான கொள்முதல், விவசாயிகள் பிரச்சனை என எதிர்க்கட்சிகளின் வாயில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் மோடி அரசுக்கு இது இன்னொரு பாரமே

ஆம் ஆத்மி பார்ட்டி சார்பில் டெல்லியில் டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

AAP Rally In Delhi News: கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த சோனியா, ராகுல்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பேரணியில் தேசிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அங்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். திராவிட முன்னேற்றக் கழக சார்பில் கனிமொழி எம்பி நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இது மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்னோட்டமாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

இன்று கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டக் கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ப்பு

கடந்த மாதம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூடுகின்றன. இன்று மதியம் நடக்க இருக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, தேவகவுடா, பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் சார்பில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் – கைலாஷ் விஜய்வர்ஜியா

சாரதா சிட்பண்ட் விவகாரம் குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க சென்றதை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனிடையே இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா, மேற்குவங்க முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக மம்தா பதவி விலக வேண்டும். சாரதா சிட்பண்ட் பிரச்சினை விசாரணைக்கு மாநில அரசும் போலீசாரும் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றனர். சிட்பண்ட்ஸ் ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக மம்தா தர்ணாவில் ஈடுபட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள் எனக் கூறினார்.

சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு, ஒரு முழுப்பார்வை.

Saradha Chit Fund Scam Case: சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல பட்டது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ சி பி ஐ அதிகாரிகளின் செயலை கண்டித்தும் மத்தியில் ஆளும் பா ஜ க அரசை எதிர்த்தும் அங்கிருக்கும் மெட்ரோ சேனல் பகுதி அருகே நேற்று முன்தினம் முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜீவ் குமாரும் அதில் பங்கேற்றார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் அங்கு திரண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பல கட்சி தலைவர்கள் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தவாறு உள்ளனர்.

சாரதா சிட் பண்ட் விவகாரம்:

கொல்கத்தாவை சேர்ந்த சுதீப்தா சென் என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் மேற்கு வங்கம் மட்டுமின்றி அசாம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்திருந்தனர். இந்த நிலையில், திடீரென்று 2013 ஆம் ஆண்டு சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.

பொது மக்களின் பணம் 30,000 கோடி வரை சுருட்டப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பெயரில் தலைமறைவு ஆகியிருந்த சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார்.

Saradha Chit Fund Scam Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளில், அரசியல் தலைவர்கள் பலருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சாரதா நிறுவன அதிபருக்கு பின்புலமாக திரிணாமுலின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் இருந்துள்ளனர். ராஜ்யசபாவின் திரிணாமுல் எம் பி ஜெய் போஸ், மம்தாவுக்கு விசுவாசமான முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார், மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் மதன் மித்ரா என அடுத்தடுத்து மம்தா ஆட்சியின் முக்கியமான நபர்கள் சாரதா வலையில் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் சாரதா குழுமத்தின் ஆலோசகர்களாக, நிர்வாக உறுப்பினர்களாக, பங்குதாரர்களாக இருந்து பல விதங்களில் உதவி வந்துள்ளனர்.

யார் இந்த ராஜீவ் குமார்?

2014 ஆம் ஆண்டு சி பி ஐ-க்கு மாற்றப்படும் வரை இந்த முறைகேடு சார்ந்த வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் தான் ராஜீவ் குமார். தற்போது இவர் கொல்கத்தாவின் காவல் ஆணையராக இருந்து வருகிறார். சி பி ஐ விசாரணையில் இந்த வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

முதல்வர் மம்தா பானர்ஜீக்கு நெருக்கமானவராக வர்ணிக்கப்படும் ராஜீவ் குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்ட சி பி ஐ அதிகாரிகள், அது பற்றி விசாரிக்க அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. பல முறை நேரில் வருமாறு அழைத்தும் அவர் நிராகரித்துவிட்டார். தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

Saradha Chit Fund Scam Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

இந்நிலையில்,அவரை நேரில் சென்று விசாரிப்பது என்று முடிவு செய்து சி பி ஐ அதிகாரிகள் 40 பேர்,கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்பொழுது தான் சி பி ஐ அதிகாரிகளை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்காமல் போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஆதரவாக பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை உலகத்தரம் வாய்ந்த அதிகாரி என பாராட்டியதோடு, தனது ஆட்சியை கெடுக்க பா ஜ க திட்டம் தீட்டுவதாகவும் சாடினார்.

இதை அடுத்து, “சாரதா சிட் பண்ட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி ராஜீவ் குமாருக்கு உத்தரவிடுமாறு” உச்ச நீதிமன்றத்தில் சி பி ஐ அதிகாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது .

அதே போல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிட் பண்ட் விவகாரத்தில் மேற்குவங்க மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்” அனுப்ப உயர்நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. அனால் அதை சி பி ஐ மீறி நடந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரித்து “சி பி ஐ-க்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

Saradha Chit Fund Scandal: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இரண்டு நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்று காலை சி பி ஐ தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங்கில் உள்ள சி பி ஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை; அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதையே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Saradha Chit Fund Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

மம்தா பானர்ஜிக்கு ஆதரவுக் கொடி தூக்கும் கட்சித் தலைவர்கள்!

காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவருக்கு பல கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாசிச பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஆதரவு கொடிகளை காட்டியுள்ளனர்.

ட்ரெண்டிங் ஆகும் #WestBengalWantsPresidentRule

சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் கைது செய்யபட்டதை தொடர்ந்து சி பி ஐ-இன் செயலை எதிர்த்தும் பா ஜா க அரசு தன் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக கூறியும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிற கட்சி தலைவர்கள் சிலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன. ட்விட்டரில் #WestBengalWantsPresidentRule என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நேரில் ஆதரவு தெரிவித்த கனிமொழி

மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் கொல்கத்தா மாநில முதலைச்சர் மம்தா, மாநில உரிமைகளை தட்டி பறிக்கும் வகையிலும் , மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல் படுவதாக குற்றம் சாட்டினார், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக சார்பில் எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் “ மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, மம்தா அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை என்று பதிவிட்டுள்ளார்.

எங்கள் கட்சியை எதிர்க்கவே மம்தா மகாகத்பந்தன் அமைப்பை உருவாக்கியுள்ளார்: ராஜ்நாத்சிங்

மாநிலத்திற்காக செலவிடும் நேரத்தை மம்தா பானர்ஜி குறைத்து கொண்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள மகாகத்பந்தன் அமைப்பு பாஜகவை எதிர்ப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உலக முதலீட்டாளர்களை அழைப்பதற்காக உலக வர்த்தக மாநாடு நடைபெற உள்ளது என்றார்.

கொல்கத்தா போலீசை விசாரிக்க வந்த சிபிஐ – மம்தா கண்டனம்

கொல்கத்தாவில் பண மோசடி செய்தவர்களுக்கும் காவல் ஆணையர் ராஜீவிற்கும் தொடர்புள்ளாதாக கூறி சிபிஐ அதிகாரிகள் அவரை விசாரிக்க அவரது வீட்டிற்கு வந்துள்ளனர், ஆனால் அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது, இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா, இது பாஜக அரசு செய்யும் சதி எனவும், கொல்கத்தாவில் அராஜகத்தை மோடி அரசு கட்டவிழ்த்து விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பயம் இல்லை எனக்கூறிய மோடி.. நம்மை பார்த்து பயப்படுகிறார்: ஸ்டாலின்

கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் “ஒற்றுமை இந்தியா மாநாடு” என்று பெயரில் நடந்து வருகிறது. மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான், தற்போது எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். நாம் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், ஒன்றுமையாக இணைந்து செயல்பட்டால் மக்கள் விரோத கட்சியான பாஜகவை அகற்றலாம் எனக் கூறினார்.