மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா கோயம்புத்தூரில் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடுகிறது. வருகிற 24-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள கூட்டத்தில் நிகழ்ச்சியில் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.