Latest Tamil Cinema News

ரசிகர்களுடன் படம் பார்க்க முகமூடி அணிந்து வந்த நடிகர்

நேற்று நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் வெளியாகியுள்ளது. காதலர்களை கவரும் வகையில் உருவாக்கியுள்ள இந்த படத்தை பார்க்க வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பார்ப்பதற்காக படத்தில் பயன்படுத்திய பைக்கில் திரையரங்கிற்கு முகமூடி அணிந்து வந்துள்ளார்.

தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யாருன்னு தெரியுமா?

விஜய் அட்லீயின் கூட்டணியில் உருவாக்கி வெற்றி பெற்ற படமான தெறி படத்தை தெலுங்கு ரீமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தை சில மாதங்களாகவே நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் முடிவாகி உள்ளது. இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ள இந்த ரீமேக் படத்தில் பவன் கல்யாண் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கால்ஷீட் பிரச்சனையால் கைவிடப்பட்டது. தற்போது இந்த கேரக்டரில் தெலுங்கில முன்னணி நடிகராக இருந்து வரும் ரவி தேஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன் அப்பாவுடன் நடிக்கும் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகையின் மகள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், அஜய் தேவ்கன் நடிக்க இருக்கும் ஒரு விளையாட்டை மையப்படுத்தி எடுக்க இருக்கும் பாலிவுட் படத்தில் தான் அவருக்கு மனைவியாக கீர்த்தி நடிக்க உள்ளார். நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய அப்பாவின் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என கீர்த்தி சுரேஷ் புகைப்படம் போட்டோ பதிவு செய்துள்ளார்.

வைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை அஞ்சலி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்ற பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் செய்த வொர்க் அவுட் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்

தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த விஸ்வாசம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் வெலிவந்து 10 வாரம் ஆகியும் இன்னும் ஒரு சில திரையரங்கில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது. தற்போது 10 வது வாரத்தை தொட்டுள்ள விஸ்வாசம் பட சென்னை ரோகினி திரையரங்கில் திரைபடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக மேலும் 2 ஷோவை அதிகரித்துள்ளது.

Rajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா?

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Tamil Cinema News: தல அஜித் உடன் மோதும் சிவகார்த்திகேயன்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் பிங்க் ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் மே ஒன்றாம் தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்து வரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படமும் அதே நாளில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Thala 59: ‘தல 59’ படம் கால்வாசி இயக்கி முடித்த எச்.வினோத்!

போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல 59 படம் அஜித் இல்லாமல் 30 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். ஹீரோயின்களை வைத்தே படத்திற்கு சம்பந்தமான மற்ற காட்சிகளை இயக்குனர் எடுத்து முடித்து விட்டாராம். அதன்படி மே முதல் தேதி அஜித் பிறந்தநாளான அன்றைய தினம் தல 59 படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் இது.

“துக்ளக்” படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாகிறார் சமந்தா

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இது அரசியல் ரீதியான கதை என்பதால் ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக சமந்தா நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நயன்தாராவின் ஐரா படத்தின் மெலோடி பாடல் “மேகதூதம் பாடவேண்டும்”

லக்ஷ்மி மற்றும் மா குறும்படங்கள் புகழ் சர்ஜுன் இயக்கி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிக்கும் ஐரா திரைப்படத்திலிருந்து மேகதூதம் என்னும் பாடல் இன்று மாலை வெளியானது. இந்தப் பாடலுக்கு தாமரை வரிகள் எழுதியுள்ளார். சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

விஜய் சேதுபதியின் புதிய பட தலைப்பு “துக்ளக்”

விஜய் சேதுபதி தன் நீண்ட நாள் நண்பரும், இயக்குனர் பாலாஜி தரணிதரன், பிரேம்குமாரின் உதவியாளருமான டில்லி பிரசாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு துக்ளக். இதனை 96 படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார் தயாரிக்கிறார். பலாஜி தரணிதரன் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஹீரோயினாக காயத்ரி நடிக்கலாம் என்று தெரிகிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுகுறித்து விஜய் சேதுபதி கூறியதாவது: டில்லி பிரசாத் எனது 8 ஆண்டு நண்பர், மிகவும் திறமைசாலி. அவரை நம்பி கிணற்றில் கூட குதிக்கலாம். அந்த அளவிற்கு நம்பிக்கையானவர். துக்ளக் கதையை ஏற்கெனவே என்னிடம் சொன்னார். நான் நடிக்கிறேன் என்று கூறியிருந்தேன். எனக்காக காத்திருந்தார். இப்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது என்றார்.