Kollywood Movie News

ரசிகர்களுடன் படம் பார்க்க முகமூடி அணிந்து வந்த நடிகர்

நேற்று நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் வெளியாகியுள்ளது. காதலர்களை கவரும் வகையில் உருவாக்கியுள்ள இந்த படத்தை பார்க்க வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பார்ப்பதற்காக படத்தில் பயன்படுத்திய பைக்கில் திரையரங்கிற்கு முகமூடி அணிந்து வந்துள்ளார்.

ரூ. 400 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படம்

உலகமெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கம் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 300 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இந்த படத்தை டிவிவி எண்டர்டேய்ன்மென்ட் தயாரிக்க உள்ளது. “ஆர்ஆர்ஆர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அஜய்தேவ்கன், நடிகை அலியாபட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஆகியோருடன் சமுத்திரகனியும் நடிக்க உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது.

நாளை எத்தனை படம் வெளியாகிறது என்று தெரியுமா?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் தமிழ் படங்கள் வெளியாவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நாளை எத்தனை படம் வெளியாகிறது என்று தெரிந்து கொள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கிரிஷ்ணம், ஜூலை காற்றில், நெடுநல்வாடை, ஆகவன், கில்லி பம்பரம் கோலி ஆகிய 6 படங்கள் நாளை திரைக்கு வர உள்ளன. இந்த 6 படங்களில் எந்தெந்த படங்கள் எந்த அளவிற்கு வரவேற்பை பெரும் என்பது ரசிகர்களின் கையிலேயே உள்ளது.