மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது, மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.