IPL 2019

ஐபிஎல் டிக்கெட் 16ஆம் தேதி முதல் விற்பனை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை 16ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள்

IPL 2019: மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் இம்முறை வெளிநாடுகளில் நடத்தப்படும் என்ற செய்தி வலம் வந்தது. அது சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை உண்டாக்கியது. அந்த வகையில் மீண்டும் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது என்ற தகவலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்று பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை அணி விளையாடும் போட்டிக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் நடைபெறுகிறது ஐபிஎல் 2019 போட்டி

IPL 2019: இம்முறை தேர்தல் வருவதால் வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டி நடத்தப்படும் என்றே பேசப்பட்டது, அண்மையில் வெளியான தகவலின் படி இந்தியாவில் முதல் கட்டமாக 17 போட்டிகள் நடைபெறுவதாக தெரிகிறது. அதிலும் முதல் போட்டி சென்னை சேப்பாக்த்தில் நடைபெறுகிறது, இதில் சென்னை பெங்களூரு அணிகள் மோதுகின்றன இது சென்னை வாசிகளுக்கு இன்ப அதிர்ச்சியாய் அமைத்துள்ளது,