சென்னைக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் பத்து கிலோமீட்டர் நிலத்தடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை கேளம்பாக்கம் சைதாப்பேட்டை டி நகர் டைடல் பார்க் போன்ற பகுதிகளில் ஒரு சில நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.