Gorakhpur

லோக்சபா தேர்தல் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி – ராகுல் காந்தி

லக்னோவில் நடந்த பேரணியின் முடிவில் பேசிய ராகுல் காந்தி, “வருகின்ற மக்களவை தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி” என்று கூறியுள்ளார். பா.ஜ.க அரசு, தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் அவர்களின் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூறிய அவர், ஏழை எளிய மக்களை ஆளும் அரசு மறந்து விட்டதாக கூறினார். மேலும் மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்த மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைமை உத்திரபிரதேசத்தின் 42 பாராளுமன்றத் தொகுதிகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று அறிவித்தது. இதையடுத்து இன்று கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கும் அவர் ரேபரேலி தொகுதியில் நான்கு நாள் சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வாருங்கள் அனைவரும் சேர்ந்து புது விதமான அரசியலை உருவாக்குவோம் என்று அவர் உத்தரபிரதேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.