General Elections 2019

20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ!

20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ!

வேட்பாளர்கள் தொகுதி மற்றும் பெயர்

  1. வடசென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி
  2. மத்திய சென்னை- தயாநிதி மாறன்
  3. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
  4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
  5. காஞ்சிபுரம் (SC)– ஜி.செல்வம்
  6. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
  7. வேலூர் – கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)
  8. தருமபுரி – டாக்டர் செந்தில் குமார்
  9. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
  10. கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)
  11. நீலகிரி- ஆ.ராசா
  12. பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்
  13. திண்டுக்கல் – வேலுச்சாமி
  14. கடலூர் – டி.ஆர்.வி. ரமேஷ்
  15. மயிலாடுதுறை – ராமலிங்கம்
  16. தஞ்சாவூர் – பழனிமாணிக்கம்
  17. சேலம் – எஸ்.ஆர். பார்த்திபன்
  18. தூத்துக்குடி – கனிமொழி
  19. தென்காசி (SC) – தனுஷ்குமார்
  20. திருநெல்வேலி – ஞான திரவியம்

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்

  1. சேலம்
  2. நாமக்கல்
  3. கிருஷ்ணகிரி
  4. ஈரோடு
  5. கரூர்
  6. திருப்பூர்
  7. பொள்ளாச்சி
  8. ஆரணி
  9. திருவண்ணாமலை
  10. சிதம்பரம் (தனி)
  11. பெரம்பலூர்
  12. தேனி
  13. மதுரை
  14. நீலகிரி (தனி)
  15. திருநெல்வேலி
  16. நாகப்பட்டனம் (தனி)
  17. மயிலாடுதுரை
  18. திருவள்ளூர் (தனி)
  19. காஞ்சிபுரம் (தனி)
  20. தென் சென்னை

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

பாஜக

  1. கன்னியாகுமரி
  2. சிவகங்கை
  3. கோவை
  4. ராமநாதபுரம்
  5. தூத்துக்குடி

பாமக

  1. தருமபுரி
  2. விழுப்புரம்
  3. அரக்கோணம்
  4. கடலூர்
  5. மத்திய சென்னை
  6. திண்டுக்கல்
  7. ஸ்ரீபெரும்புதூர்

தேமுதிக

  1. கள்ளக்குறிச்சி
  2. திருச்சி
  3. சென்னை வடக்கு
  4. விருதுநகர்
  5. தமிழ் மாநில காங்கிரஸ்

    1. தஞ்சாவூர்
    2. புதிய தமிழகம்

      1. தென்காசி
      2. புதிய நீதி கட்சி

        1. வேலூர்
        2. என்.ஆர்.காங்கிரஸ்

          1. புதுவை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். 24 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்

  1. குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்
  2. ஆம்பூர் – பாலசுப்பிரமணி
  3. அரூர் – முருகன்
  4. மானாமதுரை – மாரியப்பன் கென்னடி
  5. சாத்தூர் – சுப்பிரமணியன்
  6. பரமக்குடி – முத்தையா
  7. பூவிருந்தவல்லி – ஏழுமலை
  8. பெரம்பூர் – வெற்றிவேல்
  9. திருப்போரூர் – கோதண்டபாணி போட்டி

மக்களவை வேட்பாளர் பட்டியல்

  1. கரூர் – தங்கவேல்
  2. பெரம்பலூர் – ராஜசேகரன்
  3. சிதம்பரம் – இளவரசன்
  4. மயிலாடுதுறை – செந்தமிழன்
  5. நாகை – செங்கொடி
  6. தஞ்சை – முருகேசன்
  7. சிவகங்கை – பாண்டி
  8. காஞ்சிபுரம் – முனுசாமி
  9. விழுப்புரம் – கணபதி
  10. சேலம் – செல்வம்
  11. நாமக்கல் – சாமிநாதன்
  12. ஈரோடு-செந்தில்குமார்
  13. திருப்பூர்-செல்வம்
  14. நீலகிரி – ராமசாமி
  15. கோவை – அப்பாதுரை
  16. பொள்ளாச்சி – முத்துக்குமார்
  17. திருவள்ளூர்-பொன். ராஜா,தென்
  18. சென்னை-இசக்கி சுப்பையா
  19. ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் நாராயணன்
  20. மதுரை – டேவிட் அண்ணாதுரை
  21. ராமநாதபுரம் – ஆனந்த்
  22. தென்காசி – பொன்னுத்தாய்
  23. திருநெல்வேலி – ஞான அருள்மணி
  24. திருச்சி – சாருபாலா தொண்டைமான்
  25. தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மீதம் உள்ளவர்களின் பட்டியல் இனிமேல்தான் வெளியிடப்படும்.

தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது, மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இன்று மாலை அதிமுகவின் அதிகாரப்பூர்வமான தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

வேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய 2 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மக்களவை தொகுதியில் பி.ஆர் நடராஜனும் மதுரையில் சு.வெங்கடேசனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதில் பி.ஆர் நடராஜன் முன்னாள் கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் என்பது கூறிப்பிடதக்கது. இரு வேட்பாளர்களும் திமுக ஆதரவோடு போட்டியிடுவதால் அவர்கள் வெற்றி பெருவார்கள் என அக்கட்சி சார்பில் கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கேட்ட தொகுதியை கொடுத்தது திமுக

வருகின்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து பட்டியலை நேற்று வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியை எங்களுக்கே தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார், விசிகவின் கோரிக்கை ஏற்று தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்ட தொகுதியையே கொடுத்துள்ளதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையும், தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை தொகுதிகளை தன்வசம் வைத்துகொண்ட திமுக!

மக்களவை தேர்தல் நெருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அப்போது வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னை ஓட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆகிய தொகுதிகளிலும் திமுக தான் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து தொகுதிகளில் திமுக தன்வசம் வைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் திமுக சார்பில் சமூகத்தில் பிரபலமானவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கன்னியாகுமாரியில் திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதற்கு மீனவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி இருக்கிறது அதன் படி

திமுக

  1. சென்னை வடக்கு
  2. சென்னை தெற்கு
  3. மத்திய சென்னை
  4. ஸ்ரீபெரும்புதூர்
  5. காஞ்சிபுரம் (தனி)
  6. அரக்கோணம்
  7. வேலூர்
  8. தர்மபுரி
  9. திருவண்ணாமலை
  10. கள்ளக்குறிச்சி
  11. சேலம்
  12. நீலகிரி (தனி)
  13. பொள்ளாச்சி
  14. திண்டுக்கல்
  15. கடலூர்
  16. மயிலாடுதுறை
  17. தஞ்சாவூர்
  18. தூத்துக்குடி
  19. தென்காசி (தனி)
  20. திருநெல்வேலி

காங்கிரஸ்

  1. புதுச்சேரி
  2. சிவகங்கை
  3. கன்னியாகுமாரி
  4. விருதுநகர்
  5. தேனி
  6. திருச்சிராப்பள்ளி
  7. கரூர்
  8. கிருஷ்ணகிரி
  9. ஆரணி
  10. திருவள்ளூர் (தனி)

விடுதலை சிறுத்தைகள் கட்சி

  1. விழுப்புரம் (தனி)
  2. சிதம்பரம் (தனி)

மதிமுக

  1. ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

  1. மதுரை
  2. கோவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

  1. திருப்பூர்
  2. நாகை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

  1. ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

  1. நாமக்கல்

ஐஜேகே

  1. பெரம்பலூர்

மேலும் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் தொடர் விடுமுறையால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்பு

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது அதோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் வருகின்ற சமயத்தில் தொடர்ந்து 5 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் வாக்கு பதிவு குறைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் கட்சிகள் சார்பில் கூறப்படுகிறது. ஐந்து நாள் விடுமுறை வருவதால் அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

”மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது” மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த கூட்டணி ஒன்றல்ல, இரண்டல்ல ஒன்பது கட்சிகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது, தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழலில் தொகுதி பங்கீடு, யாருக்கு எந்த தொகுதிகள் என்பது போன்ற அலோசனைகளையெல்லாம் நிறைவு செய்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளது திமுக தலைமையிலான கூட்டணி.

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சார பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 9 கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

பிரதமரை கடுமையாக சாடிய ராகுல்

பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். மாநில கட்சிகளை மத்திய பாஜக அரசு அடக்குமுறை செய்ய முயற்ச்சிப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தை டெல்லியில் இருந்து பாஜக ஆண்டுவருவதாகவம் கூறினார். மேலும் 2014 நாட்டு மக்களிடம் மோடி என்ன வாக்குறுதிகளை தந்தாரோ எதையுமே அவர் நிறைவேற்றவில்லை.

15 லட்சம் ஏங்கே?

2014 மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய மோடி அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துகிறேன் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்து 5 வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றார் ராகுல்.

மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எச்.ஏ.எல் என்ற நிறுவனத்தின் மூலமாக 526 கோடி ரூபாய்க்கு போர் விமானம் வாங்க அரசு முடிவு செய்தது. ஆனால் தற்போதைய மோடி அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு தற்போது ஒரு போர் விமானத்தை 1600 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் மூலம் ஊழல் செய்த மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது என்றார்.
45 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம்

மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கான அரசு. தற்போதைய ஆட்சியில் ஏழைமக்களும், இளைஞர்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்றார். மேலும் கடந்த 45 வருடகாலம் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு செய்து தரப்படும் எனக் கூறினாரே தவிர அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்பது தான் உண்மை.
போட்டி போட்டு புகழ்ந்த ராகுல் மற்றும் ஸ்டாலின்

பிரச்சார பொதுகூட்டத்தில் பேசிய ஸ்டாலின் நமது நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் அவர் இன்னும் சில நாட்களில் பிரதமராக பதவியேற்று கொள்வார் என கூறினார். பின்னர் தனது உரையை துவங்கிய ராகுல் காந்தி தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இரு தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். இது எந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் அளிக்கும் என்பதை மக்கள் விரைவில் தெரியப்படுத்துவார்கள்.

மோடியா ? ராகுலா ?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள தான் ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது.

மே23 வரை காத்திருப்போம்….

பொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு

மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கலந்துகொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மோடி மக்களுக்கு கொடுத்திருந்தார். மோடி அவர்கள் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 இலட்சம் தருவதாகச் சொன்னார். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும் தெரிவித்தார். அவர் கூறிய எதையுமே செயல் படுத்தவில்லை என ராகுல் குற்றம் சாட்டினார்.

அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் தோற்கடிப்போம், காடுவெட்டி குருவின் குடும்பத்தார் ஆவேசம்

பாமகவின் மூத்த நிர்வாகி காடுவெட்டி குருவின் குடும்பத்தார் அண்மையில் செய்தியாளரை சந்தித்தனர். அப்போது பாமகவின் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை நாங்கள் நிச்சயம் தோற்கடிப்போம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து குருவின் தாயாரே போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அண்மையில் அவரது குடும்பத்தினர் “ மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம்’’ என்ற அமைப்பை துவங்கினர். அப்போது நூறுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குருவின் மகன் கனலரசன் கலந்து கொள்ளவில்லை. இதற்கு பதிலளித்த அவரது குடும்பத்தினர் கனலரசன் மீது ராமதாஸ் குடும்பத்தாரால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவரை அழைத்து வர வில்லை என கூறினர். மேலும் குருவின் உடல் மோசமான சூழ்நிலைக்கு சென்ற நிலையிலும் அவரை கண்டுகொள்ளாது ராமதாஸும் , அன்புமணியும் இருந்தனர். வெளிநாட்டிற்கு அழைத்து சென்ற மருத்துவம் பார்க்கலாம் என தொடர்ந்து சொல்லி வந்தனர். ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார். குருவை ராமதாஸ் குடும்பத்தினர் கொன்றுவிட்டனர் என ஆதங்கப்பட்டனர்.

பாமக தலைவர் ஒரு சந்தர்பவாதி

தேர்தல் வரும் சமயத்தில் எங்கு சேர்ந்தால் லாபம் என்றே ராமதாஸ் யோசிப்பார். திமுகவையும், அதிமுகவையும் விமர்சித்துவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்தால் பாமக நிர்வாகிகள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். கடந்த 30 வருடங்களாக குரு பாமகவுக்கும் வன்னியர்கள் நலனுக்காகவும் உழைத்து வந்தார். இதனால் பெரும்பாலான பாமக தொண்டர்களின் ஆதரவு எங்கள் குடும்பத்தினர்க்கு தான் என்றும் தெரிவித்தனர். ராமதாஸ் குடும்பம் எங்களை தொடர்ந்து அச்சுருத்தி வருகிறது. அதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என கூறினார். வரும் மக்களவை தேர்தலில் அன்புமணியை தோற்கடிப்போம். அதில் உறுதியாய் உள்ளோம் என்றனர்.

மூத்த நிர்வாகி குரு இருக்கும் வரை பாமக தலைமையோடு நெருக்கமாக இருந்தார் குரு ஆனால் அவர் மறைந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எதனால் இப்படி என்ற கேள்வி மக்களின் மனதை சுற்றி சுற்றி வருகிறது. குருவின் குடும்பத்தாரின் கருத்துக்கள் தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மோடியை கட்டித் தழுவியது ஏன்? ராகுல் விளக்கம்

சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மோடியை நீங்கள் கட்டித் தழுவியது ஏன் என்ற கேள்விக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமோ வெறுப்போ கிடையாது எனவும் எப்போதும் கோபத்துடன் இருக்கும் மோடிக்கு அழகான அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தவே நாடாளுமன்றத்தில் அவரைக் கட்டியணைத்தேன் என ராகுல் விளக்கம் அளித்தார்.

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் ராகுல் நம்பிக்கை

கன்னியாகுமாரி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பின்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். Made in China என்பதற்கு பதிலாக Made in Tamil Nadu என்ற அளவிற்கு உற்பத்தி தொழிலை தமிழகத்தை முன்னேற்றுவோம். பணக்காரர்களுக்கு கடனுதவி வழங்காமல் இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் அளிப்போம் என உறுதியளித்துள்ளார்.

சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது, தமிழகம் முழுவதிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அங்கு செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நம்பிக்கை இழக்காதீர்கள்- அன்புமணி

Lok Sabha Elections 2019: சென்னையில் இன்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது “அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கும் எங்களின் கோரிக்கைகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை விடாமல் இருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதி அளித்தார். எழுவர் விடுதலை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீட் மற்றும் மதுவிலக்கு வேண்டாம் என தொடர் அழுத்தம் கொடுப்போம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டு 6% வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் அதற்காக அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழக மக்கள் எங்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையை பாராட்டினார்கள். ஆனால் ஓட்டு போடவில்லை. தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனியாக வரும் 15 ஆண்டுகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதனால் தான் வியூகத்தை மாற்றியுள்ளோம்” என கூறினார்.