பாமகவின் மூத்த நிர்வாகி காடுவெட்டி குருவின் குடும்பத்தார் அண்மையில் செய்தியாளரை சந்தித்தனர். அப்போது பாமகவின் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை நாங்கள் நிச்சயம் தோற்கடிப்போம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து குருவின் தாயாரே போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அண்மையில் அவரது குடும்பத்தினர் “ மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம்’’ என்ற அமைப்பை துவங்கினர். அப்போது நூறுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குருவின் மகன் கனலரசன் கலந்து கொள்ளவில்லை. இதற்கு பதிலளித்த அவரது குடும்பத்தினர் கனலரசன் மீது ராமதாஸ் குடும்பத்தாரால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவரை அழைத்து வர வில்லை என கூறினர். மேலும் குருவின் உடல் மோசமான சூழ்நிலைக்கு சென்ற நிலையிலும் அவரை கண்டுகொள்ளாது ராமதாஸும் , அன்புமணியும் இருந்தனர். வெளிநாட்டிற்கு அழைத்து சென்ற மருத்துவம் பார்க்கலாம் என தொடர்ந்து சொல்லி வந்தனர். ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார். குருவை ராமதாஸ் குடும்பத்தினர் கொன்றுவிட்டனர் என ஆதங்கப்பட்டனர்.

பாமக தலைவர் ஒரு சந்தர்பவாதி

தேர்தல் வரும் சமயத்தில் எங்கு சேர்ந்தால் லாபம் என்றே ராமதாஸ் யோசிப்பார். திமுகவையும், அதிமுகவையும் விமர்சித்துவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்தால் பாமக நிர்வாகிகள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். கடந்த 30 வருடங்களாக குரு பாமகவுக்கும் வன்னியர்கள் நலனுக்காகவும் உழைத்து வந்தார். இதனால் பெரும்பாலான பாமக தொண்டர்களின் ஆதரவு எங்கள் குடும்பத்தினர்க்கு தான் என்றும் தெரிவித்தனர். ராமதாஸ் குடும்பம் எங்களை தொடர்ந்து அச்சுருத்தி வருகிறது. அதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என கூறினார். வரும் மக்களவை தேர்தலில் அன்புமணியை தோற்கடிப்போம். அதில் உறுதியாய் உள்ளோம் என்றனர்.

மூத்த நிர்வாகி குரு இருக்கும் வரை பாமக தலைமையோடு நெருக்கமாக இருந்தார் குரு ஆனால் அவர் மறைந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எதனால் இப்படி என்ற கேள்வி மக்களின் மனதை சுற்றி சுற்றி வருகிறது. குருவின் குடும்பத்தாரின் கருத்துக்கள் தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.