மக்களவைத் தேர்தல் நடைபெறும் அன்றே பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இந்த 18 தொகுதிகளுக்கான தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி 10 தொகுதிகளுக்கு மேல் வென்றால் அது பெரிய விஷயம் எனவும் குறிப்பிட்டார்.