DMDK Leader Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இன்று மாலை அதிமுகவின் அதிகாரப்பூர்வமான தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

சின்ன பையனை வைத்து பேச வேண்டாம்- ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

AIADMK: மக்களவை தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் இணையும் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. சில கட்சிகளை விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகர் கட்சி மேடைகளில் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜேந்திரபாலாஜி சின்ன பையனை வைத்து தேமுதிக பேசவேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் கவலை இல்லை ஜெயக்குமார் பேச்சு

Elections 2019: மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக மாபெரும் கூட்டணியை அமைத்து வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே பாஜகவும் பாமகவும் இணைந்துள்ளனர்.அதிமுக கட்சி சார்பாக தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி வரவில்லை என்றால் கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் பலம் மற்ற கட்சிகளுக்கு தெரிந்துள்ளது

DMDK News: விஜய பிரபாகர், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணி முடிவை அறிவித்து வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும் மலர்ந்துள்ளது. இரு கூட்டணிகளும் விஜயகாந்த் எங்களோடு சேர வேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர். அன்மையில் திமுக சார்பாக திருநாவுக்கரசர், ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அதிமுக கூட்டணி சார்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் தேமுதிகவின் பலம் எல்லா கட்சிகளுக்கும் தெரிந்துள்ளது என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ரஜினிகாந்த் சந்திப்பு

Vijayakanth: தனது சிகிச்சை நிறைவு செய்துவிட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விஜயகாந்த் பூரண நலம் பெற்று வரும் இந்த சமயத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

தேமுதிக யார் பக்கம் ? பரபரப்பான அரசியல் களம்

Lok Sabha 2019 Elections: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட ஆரம்பித்து விட்டனர், ஆனால் தேமுதிக இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை கூட வெளியிடவில்லை. தேமுதிக அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் என்றே கூறப்பட்டது, பாஜக, பாமக கூட்டணி அறிவிக்கபட்ட அதே நாளில் தேமுதிக கூட்டணியும் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கபட்டது ஆனால் அன்று தேமுதிகவுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட வில்லை, விஜயகாந்த் வீட்டிற்க்கு சென்ற மத்திய அமைச்சர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நட்த்தினார், ஆனால் தேமுதிக சார்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக தெரிகிறது, அதில் பாமாகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்படும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது, ஆனால் அதனை அதிமுக ஏற்று கொள்ள தயாராக இல்லை. மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் ஏற்கனவே 12 தொகுதிகளை பாமகவுக்கும் பாஜகவுக்கும் கொடுக்கப்பட்டு விட்ட்து, மேலும் 7 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்தால், அதிமுகவுக்கு 21 தொகுதிகளாக குறையும், மேலும் தாமாக போன்ற கட்சிகள் வரும் சூழலில் அவர்களுக்கும் ஒரு சில தொகுதிகளில் ஒதுக்கபட வேண்டும்,

இறுதியில் அதிமுகவிற்க்கு குறைவான தொகுதிகளே கிடைக்கும், இதனை கருத்தில் கொண்டே அதிமுக அதிக தொகுதிகளே கொடுக்க மறுக்கிறது. அதிமுக தொண்டர்களும் இதனை விரும்ப மாட்டார்கள்,,

அதிமுக நிச்சயமாக குறைந்த பட்சம் 23 தொகுதிகளில் போட்டியிடும், அப்படியென்றால் இன்னும் 5 தொகுதிகளை மட்டுமே அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுதரும் என தெரிகிறது.

திமுக கூட்டணிக்கு செல்லுமா தேமுதிக ?

பிப்ரவரி 21 காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுகரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்தார், அப்போது அவரது உடநலம் குறித்து விசாரிக்க வந்தேன், மேலும் தமிழக அரசியல் குறித்தும் பேசினோம் என்றார். நிச்சயம் திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவே விஜயகாந்தை சந்தித்தார் என அரசியல் பார்வையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திமுக பொருத்துவரை 10 தொகுதிகளை காங்கிரஸ் விட்டு கொடுத்துள்ளது, மேலும் அவர்களிடம் 30 தொகுதிகள் உள்ளது, திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் கோரிக்கை ஒரிரு தொகுதிகள் மட்டுமே ஆக தேமுதிக ஒரு வேளை கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு ஐந்து தொகுதிகள் வரை இதுக்கப்பட வாய்ப்புள்ளது.

முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் தேமுதிக

தேமுதிவுக்கு இரு கூட்டணிகளும் அழைப்பு விடுக்கபட்டுள்ளது, எந்த கட்சி அதிக தொகுதிகளை தர தயாரா உள்ளதோ அங்கு தேமுதிக செல்லும் என சிலர் சொல்லப் படுகிறது.

தேமுதிகவின் நோக்கம்

தேமுதிக தமது கட்சியை பலப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது, கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்களவை தேர்தலிலும் படு தோல்வி அடைந்துள்ளது ஆகவே மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்க தேமுதிக முயல்கிறது. அதற்கு ஒரே வழி பலம் பொருந்திய கட்சிகளோடு கூட்டணி வைத்து வெல்லவதே ஒரே வழி…

உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Election 2019 Tamil Nadu:  மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்த விவரம்

பாமக – 7
பாஜக 5

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.

இணைந்தது பாமக

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

கைகோர்த்த பாஜக

ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?

இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

திமுக கூட்டணிக்கு சவாலா ?

இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.

யாருக்கு எந்த தொகுதிகள் ?

அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?

மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.

Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

Vijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் சென்னை திரும்பினார் : மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவருக்கு பலத்தவரவேற்பு அளிக்கப்பட்டது. புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டார் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் நாடு திரும்பியதும் தேமுதிகவின் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கட்சி சார்பில் கூறியிருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ஏதேனும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

பா.ஜ.க மற்றும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதை அடுத்து நாளை மறுநாள் காலை 8.30 மணி அளவில் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னைக்கு வந்த பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.