Deputy CM O Pannerselvam

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகள்?

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும் தேமுதிக பொருத்தவரை கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இம்முறை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் சுதீஷ் கட்சி சார்பாக களமிறங்குவார்கள் எனவும் தெரிகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தேமுதிக அதிமுக கூட்டணி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக பாமக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் வரிசையில் தேமுதிகவும் இணையும் என்ற தகவல் கடந்த மூன்று வாரங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தொகுதி பங்கீடுகளில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்கியுள்ளது அதிமுக தலைமை. மேலும் அவர்கள் கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி, போன்ற தொகுதிகளை கோரியுள்ளதாகவும் தெரிகிறது.

முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

இன்று காலை அதிமுகவின் எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணமடைந்தார், இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்களை மட்டுமின்றி அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது, அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ராமதாஸ் இல்லத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு விருந்து

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விருந்திற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று முதல்வர் துணை முதல்வர் அமைச்சர் பெருமக்கள் வருகை புரிந்தனர். மக்களவைத் தேர்தல் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விவாதித்ததாக தெரிகிறது.

24 ஆம் தேதி தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது அதிமுக

Lok Sabha Elections 2019: தமிழக மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அதிகாரபூர்வமாக இணைத்துவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமுதிக உடன் அதிமுக தலைமை அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24 ஆம் தேதி, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிடப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

பாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?

அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை மாநிலமே எதிர்பார்த்து வரும் நிலையில் கட்சி தலைமை அமைதி காத்து வருகிறது. இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், “பாஜக, பாமக மற்றும் தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் யுக்திகளை கையாளுகிறதா அதிமுக ?

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளர். தமிழகத்தை பொருத்தவரை அனைத்து வர்கத்தை சார்ந்தவரும் உள்ளனர். இன்றைய சமூகத்தில் பல்வேறு வளர்ச்சிகளை நாம் அணுதினமும் பார்க்கிறோம், ஆனால் அதனை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களால் ருசிக்கமுடியாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நிதிநிலைமை. இன்றைய கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு நிகராக வளர்ந்து வருகிறது. மருத்துவமும் செலவும் இமாலய உயரத்தை தொட்டுவிடுகிறது. இதன் விளைவாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் ஏழை தொழிலாளர்களின் துயரை மொத்தமாக நீக்கிவிடாது என்றாலும் அவர்களுக்கு அறுதலாக இருக்கும் என்பதே உண்மை. இந்த திட்டத்தின் வாயிலாக வருடத்திற்கு 24,000 ரூபாய் என்பது ஏழை தொழிலாளர்களுக்கு மிகவும் தேவையான ஓன்றாக இருக்கும். ஒரு கிராமப்புற குழந்தையின் கல்வி செலவுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் 60 லட்சம் தொழிலாளர்கள் நன்மை அடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது நல்ல திட்டம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை, இருப்பினும் அதனை நடைமுறைபடுத்த இது சரியான காலம்தானா என்ற கேள்விகளை எழுப்புகிறது. அண்மையில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அப்போது தேர்தலை கருத்தில் கொண்டு தான் அதிமுக சில திட்டங்களை அறிவித்துள்ளது என்ற அதே குற்றச்சாட்டு இதற்க்கும் பொருந்தும். ஏழை தொழிலாளர்களுக்கு ஊக்க தொகை கொடுப்பது பெருமை அல்ல, ஏழை தொழிலாளர்களை உயர்த்த ஒரு திட்டம் தீட்டாதது ஏன் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. இந்த 2000 ரூபாயும் 60 லட்சம் தொழிலாளர்களை சென்று அடையுமா? இந்த திட்டம் எப்போது அமல் படுத்தப்படும், என்ற பதிலுக்காக காத்திருக்கிறார்கள் ஏழை தொழிலாளர்கள். பொதுவாகவே தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் வரும் சூழலில் இலவச திட்டங்கள், கடன் ரத்து போன்று திட்டங்களை அறிவித்து மக்களை கவர்வது தமிழக அரசியலில் வழக்கமான ஒன்று தான்.

தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் பற்றிய அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

தொழில் துறை:

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு.
  • முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி ஒதுக்கீடு.
  • குறு, சிறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு.
  • நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு.

மின்சார துறை:

  • கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூபாய் 5259 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலம்:

  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ.572.19 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகளும் 3000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு.

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled – தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

Tamil Nadu Budget 2019 – Education: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கல்வி துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

  • மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
  • பள்ளிக்கல்வி துறைக்கு ரூபாய் 28,757.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உயர் கல்வி துறைக்கு ரூபாய் 4584.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்.
  • புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2011-12 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 63,178 ஆக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.
  • Tamil Nadu Budget 2019 – Education: தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

தமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • விவசாயத்திற்கு ரூபாய் 10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 621.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு லட்சம் ஹெக்டர் பரப்பில் தண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூபாய் 1361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.
  • கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நெல் கொள்முதல் ஊக்கத் திட்டத்திற்கு ரூபாய் 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800-க்கும், சன்ன ரக நெல் ரூபாய் 1840-க்கும் வழங்கப்படும்.
  • விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 லட்சம் ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ரூபாய் 198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 100 கோடி செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.
  • வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூபாய் 172 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
  • கஜா புயல் நிவாரணத்திற்காக 2361.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers – தமிழக பட்ஜெட் 2019: வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை

Tamil Nadu Budget 2019-Transportation2019: 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் போக்குவரத்து துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • நெடுஞ்சாலை துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 1142 கோடி செலவில் 1986 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 45.01 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் இந்த
    மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
  • இனி வரும் நாட்களில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.90 கிலோமீட்டர் நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – கோயம்பேடு வரை 52.01 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும்.
  • மீனம்பாக்கம்-வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
  • 256 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூபாய் 726.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை,கோவை மற்றும் மதுரையில் 500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
  • ஜெர்மன் கடனுதவியுடன் 12,000 BS – 4 என்ஜின் பேருந்துகளும் 2000 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும்.

Tamil Nadu Budget 2019: Transportation – தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை