முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. இதனிடையே அந்த ஆணையம் தங்களது மருத்துவமனைக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் படி நடந்து கொள்வதால் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பல்லோ மருத்துவ குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அதை விசாரித்த நீதிபதிகள் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததோடு வருகின்ற 15ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.