தமிழகம் வந்த பிரதமர் மோடி திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “கலப்பட மருந்தை போன்று ஆபத்தானது கலப்பட கூட்டணி. எதிர்க்கட்சிகளின் கலப்படமான கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள். என்னை தோற்கடிக்க வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளார். ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால் காங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.