Chennai Super Kings

கார்த்தி நடிப்பில் பட பூஜையுடன் தொடங்கியது ‘கார்த்தி 19’

தற்போது ‘கைதி’ என்ற படத்தில் நடந்து வரும் நடிகர் கார்த்தி, ‘கார்த்தி 19’ என்ற அழைக்கப்படும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. அதிக பொருள் செலவில் இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா என்ற நடிகை தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

இந்திய அணிக்கு 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே டெல்லியில் நடந்து வரும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்திய பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டையும், ஜடேஜா, சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

ஐபிஎல் டிக்கெட் 16ஆம் தேதி முதல் விற்பனை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை 16ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள்

IPL 2019: மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் இம்முறை வெளிநாடுகளில் நடத்தப்படும் என்ற செய்தி வலம் வந்தது. அது சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை உண்டாக்கியது. அந்த வகையில் மீண்டும் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது என்ற தகவலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்று பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை அணி விளையாடும் போட்டிக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.