நாம் தமிழர் கட்சி இதுவரை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது ஆனால் போதிய வாக்கு சதவீதம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான புதிய சின்னத்தை கேட்டு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.