Bill Gates

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பர்க்கர் வாங்கிய பில்கேட்ஸ்

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பர்கர் வாங்குவதற்காக ஹோட்டல் முன் வரிசையில் நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பில்கேட்சிடம் கடைக்காரர் கேட்டதற்கு, தன்னிடம் ஏராளமாக பணம் இருந்தும் தான் விரும்பிய சுதந்திரம் இல்லை என்று கூறிய பில்கேட்ஸ் தற்போது அதனை விரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். கடையின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் பில்கேட்சுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார்.

மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பாராட்டை பெற்ற பிரதமர் மோடியின் இன்சூரன்ஸ் திட்டம்

மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் ஆனதை ஒட்டி வெளியான பத்திரிக்கைச் செய்தியை சுட்டிக் காட்டி அமைச்சர் ஜே.பி.நட்டா பதிவிட்டதை மேற்கோள் காட்டி மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வெளியிட்ட டுவிட்டரில் பதிவில், 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் இத்திட்டத்தால் பயன் அடைந்திருப்பதாகவும், இதற்காக இந்திய அரசுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது