இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே டெல்லியில் இன்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 237 ரன்கள் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரு அணிகள் இடையே நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலி மற்றும் டெல்லியில் நடந்த அடுத்த மூன்று ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவும் வெற்றி 3-2 போட்டி கணக்கில் தொடரை வென்றுள்ளது.