5th ODI

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே டெல்லியில் இன்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 237 ரன்கள் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரு அணிகள் இடையே நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலி மற்றும் டெல்லியில் நடந்த அடுத்த மூன்று ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவும் வெற்றி 3-2 போட்டி கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இந்திய அணிக்கு 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே டெல்லியில் நடந்து வரும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்திய பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டையும், ஜடேஜா, சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 252 ரன்களை எடுத்தது. போட்டியை வெல்லும் முனைப்போடு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 90 ரன்கள் விளாசிய ராயுடு ஆட்ட நாயகன் விருதையும், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமத் ஷமிக்கு தொடரின் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி, நியூசிலாந்து அணி 32 ஓவர்களில் 136/6

இந்தியா – நியூசிலாந்து கிரிகெட் அணியில் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி, 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் எடுத்தது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராய்டு 90 ரன்கள் அடித்தார். 253 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 32 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய பந்து வீச்சாளர்களில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், பாண்டேயா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இவருக்கு பதில் தோனியை களமிறக்குங்கள்! – சுனில் கவாஸ்கர்

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் 3 ஒருநாள் போட்டிகளில் வென்று 4 ஆவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. விராட், தோனி போன்ற அனுபவ வீரர்கள் அந்த போட்டிக்கான அணியில் இடம்பெறாததும், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படாததுமே தோல்வியின் காரணங்களாக விமர்சிக்கப்பட்டன. இதையடுத்து நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாட தோனி தகுதி பெற்றால், தினேஷ் கார்த்திக்கு பதிலாக அவரது இடத்தில் தோனி களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.