2019 Lok Sabha Elections Alliances

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை

DMK Lok Sabha Election Manifesto: திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசனை செய்ய உள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் அறிக்கை இன்றே இறுதி செய்யப்பட்டு, மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் தேதி தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது அதிமுக

Lok Sabha Elections 2019: தமிழக மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அதிகாரபூர்வமாக இணைத்துவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமுதிக உடன் அதிமுக தலைமை அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24 ஆம் தேதி, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிடப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அமித் ஷா இன்று தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் அந்த வகையில். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித் ஷா. அரசியல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்க உள்ளார்.

தேமுதிக யார் பக்கம் ? பரபரப்பான அரசியல் களம்

Lok Sabha 2019 Elections: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட ஆரம்பித்து விட்டனர், ஆனால் தேமுதிக இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை கூட வெளியிடவில்லை. தேமுதிக அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் என்றே கூறப்பட்டது, பாஜக, பாமக கூட்டணி அறிவிக்கபட்ட அதே நாளில் தேமுதிக கூட்டணியும் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கபட்டது ஆனால் அன்று தேமுதிகவுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட வில்லை, விஜயகாந்த் வீட்டிற்க்கு சென்ற மத்திய அமைச்சர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நட்த்தினார், ஆனால் தேமுதிக சார்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக தெரிகிறது, அதில் பாமாகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்படும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது, ஆனால் அதனை அதிமுக ஏற்று கொள்ள தயாராக இல்லை. மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் ஏற்கனவே 12 தொகுதிகளை பாமகவுக்கும் பாஜகவுக்கும் கொடுக்கப்பட்டு விட்ட்து, மேலும் 7 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்தால், அதிமுகவுக்கு 21 தொகுதிகளாக குறையும், மேலும் தாமாக போன்ற கட்சிகள் வரும் சூழலில் அவர்களுக்கும் ஒரு சில தொகுதிகளில் ஒதுக்கபட வேண்டும்,

இறுதியில் அதிமுகவிற்க்கு குறைவான தொகுதிகளே கிடைக்கும், இதனை கருத்தில் கொண்டே அதிமுக அதிக தொகுதிகளே கொடுக்க மறுக்கிறது. அதிமுக தொண்டர்களும் இதனை விரும்ப மாட்டார்கள்,,

அதிமுக நிச்சயமாக குறைந்த பட்சம் 23 தொகுதிகளில் போட்டியிடும், அப்படியென்றால் இன்னும் 5 தொகுதிகளை மட்டுமே அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுதரும் என தெரிகிறது.

திமுக கூட்டணிக்கு செல்லுமா தேமுதிக ?

பிப்ரவரி 21 காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுகரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்தார், அப்போது அவரது உடநலம் குறித்து விசாரிக்க வந்தேன், மேலும் தமிழக அரசியல் குறித்தும் பேசினோம் என்றார். நிச்சயம் திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவே விஜயகாந்தை சந்தித்தார் என அரசியல் பார்வையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திமுக பொருத்துவரை 10 தொகுதிகளை காங்கிரஸ் விட்டு கொடுத்துள்ளது, மேலும் அவர்களிடம் 30 தொகுதிகள் உள்ளது, திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் கோரிக்கை ஒரிரு தொகுதிகள் மட்டுமே ஆக தேமுதிக ஒரு வேளை கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு ஐந்து தொகுதிகள் வரை இதுக்கப்பட வாய்ப்புள்ளது.

முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் தேமுதிக

தேமுதிவுக்கு இரு கூட்டணிகளும் அழைப்பு விடுக்கபட்டுள்ளது, எந்த கட்சி அதிக தொகுதிகளை தர தயாரா உள்ளதோ அங்கு தேமுதிக செல்லும் என சிலர் சொல்லப் படுகிறது.

தேமுதிகவின் நோக்கம்

தேமுதிக தமது கட்சியை பலப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது, கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்களவை தேர்தலிலும் படு தோல்வி அடைந்துள்ளது ஆகவே மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்க தேமுதிக முயல்கிறது. அதற்கு ஒரே வழி பலம் பொருந்திய கட்சிகளோடு கூட்டணி வைத்து வெல்லவதே ஒரே வழி…

தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக

DMK Lok Sabha Election Manifesto: வருகின்ற மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என விரும்பும் மக்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தங்களது யோசனைகளையும், கனவு திட்டங்களையும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் – விஜயகாந்த் இன்று சந்திப்பு

DMDK Vijayakanth: சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியா திரும்பி சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், அவரின் உடல்நலன் குறித்து விசாரிக்க தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று அவருடைய இல்லத்திற்கு செல்கிறார். தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக கடுமையாக முயற்சி செய்து வரும் நிலையில், திமுகவும் தனது பங்கிற்கு முயற்சிகளை முன்வைக்கிறதோ என்ற சந்தேகத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்துகிறது.

திருமாவளவனுக்கு ஒரே தொகுதி

Lok Sabha Elections 2019: திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படும் எனவும் தெரிகிறது. மேலும் அவர் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆவலாக இருப்பதாக தகவல்.

மதிமுக உயர்நிலை குழு பிப்.25ல் கூடுகிறது

Lok Sabha Elections 2019: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார். அதில் மதிமுக சார்பில் மக்களவை தேர்தலுக்காக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விருதுநகர் தொகுதியில் வைகோ மீண்டும் போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக – காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீடு உறுதியானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதன்படி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மற்ற மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும், தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியிருக்கும் நிலையில், தற்பொழுது திமுக காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருப்பது தமிழகத்தில் காங்கிரஸின் மீதான மக்களின் பார்வை சாதகமாக இருப்பதை கருத்தில் கொண்டு திமுகவால் எடுக்கப்பட்ட முடிவு என்றே சொல்லலாம்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகளை எதிர்த்து போட்டியிட்டு வெல்ல திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குளறுபாடுகளும் மன கசப்புகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். அதை உணர்ந்திருக்கும் திமுக தொகுதி பங்கீட்டில் காங்கிரஸிற்கு போதும் என்ற அளவிற்கு அள்ளி வழங்கியிருக்கிறது.

காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக

Lok Sabha Elections 2019: காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகி உள்ள கூட்டணி ஒப்பந்தப்படி, மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம் பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக தகவல்

Lok Sabha Elections 2019: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அதில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் போட்டியிடும் எனவும் அதில் போட்டியிட்டு தற்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை தோற்கடிப்போம் எனவும் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த 10 தொகுதிகளில் நிச்சயம் காங்கிரஸ் கன்னியாகுமரியில் போட்டியிடும் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் தகவல்.

காங்கிரஸ்க்கு 10 தொகுதியா ?

Breaking News Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, தொகுதி பங்கீடு பொறுத்தவரை காங்கிரஸ்க்கு 8 தொகுதி வழங்க தயார் என திமுக தலைமை அறிவித்திருந்தது, ஆனால் காங்கிரஸ் இரட்டை இலக்கில் தொகுதிகளில் கேட்டது, நிறைவாக 10 தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ்கே தரப்படும் என தெரிகிறது, மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளது.

Lok Sabha Elections 2019 : பியூஷ் கோயலுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

Lok Sabha Election 2019 Alliance: இன்று காலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, பாமகவிற்கு 7 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஸ், ஆகியோர் சந்திப்பு நடைபெறுகிறது, பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.

Lok Sabha Elections 2019 : உறுதியானது அதிமுக பாமக கூட்டணி

Lok Sabha Election AIADMK – PMK Alliance: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாமாகவும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாமகவிற்கு என துணை முதல்வர் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடக்க இருக்கும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Tamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற கனிமொழி

Tamil Nadu DMK News: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக கனிமொழி களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அங்கு தேர்தல் வேலைகளை கவனிக்கவும் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் நேற்று மாலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கியதும் கட்சி தலைமையிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு வந்த விமானத்திலேயே சென்னை திரும்பிய அவர் பிறகு டெல்லிக்கு விரைந்தார்.

அனைத்து கட்சி கூட்டம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை ஒரு அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.

திமுக சார்பில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு க ஸ்டாலின் கூறியதன் பெயரில் கனிமொழி மற்றும் டி ஆர் பாலு ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

இதையடுத்து நடைபெற்ற அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் “தீவிரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினருக்கு உதவியாக தோளோடு தோள் நிற்போம்; நாட்டின் ஒற்றுமையையும் நேர்மையையும் காப்போம்” என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உறுதிமொழி எடுத்தனர்.

Lok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா

Lok Sabha Election Alliance in Tamil Nadu: தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில கட்சிகளோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை  துவங்கியுள்ளது பாஜக. தமிழக அரசியலை பெருத்தவரையில் பாஜக ஒற்றரை இலக்கு வாக்கு வங்கியையே பெற்றுள்ளது, தமிழகத்தில் நடந்த கடைசி தேர்தலான ஆர்.கே நகர் தேர்தலில் நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளை பெற்றது பாஜக, தமிழகத்தில் தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவோடு கூட்டணி தொடர்பாக சில தினங்களாகாவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக-பாஜகவோடு மேலும் சில கட்சிகளும் சேரும் என்றே பேசப்பட்டது. அண்மையில் பாமக இளைகஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார், மேலும் தேமுதிக சார்பில் சில கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று அறிவிக்கப்பட்டது, அதிமுக தரப்பில் பேசிய வைத்தியலிங்கம் கூறியதாவது ‘’ பாமக, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம்” என்றார். இந்த தருணத்தில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அமித்ஷா தமிழகம் வந்த அதே நாளில் தான் மத்திய அமைச்சர் பி்யுஷ் கோயலும் சென்னை விரைந்தார். தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர், இது அவர்கள் கூட்டணியை தொடர்பான செய்தி உறுதியானது, ஆகவே அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதில் அதிமுகவையும் இதர மாநில கட்சிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக இறக்கியுள்ளதாக தெரிகிறது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தால் தொகுதி பங்கீடு பற்றிய கேள்வி ஏழும், அதற்கு பதில் தரும் விதமாக சமூக வலைதளத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகவலின் அடிப்படையில்

அதிமுக  24 தொகுதிகளும்

பாஜக     8    தொகுதிகளும்

பாமக   4     தொகுதிகளும்

தேமுதிக  4  தொகுதிகளும்

போட்டியிடலாம் என்றே கூறப்படுகிறது, இருப்பினும் இவைகளில் எந்த கட்சியும் கூட்டணி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப் படும் என்றே றப்படுகிறது. மேலும் தமிழக மக்களிடையே இந்த கூட்டணி வரவேற்பை பெருமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகளே சரியான பதிலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Lok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ம.தி.மு.க. நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட வேண்டும். மேலும் பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தேர்தலில் 125 இடங்களை மட்டுமே பாஜகவால் வெல்லமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்றார்.

Tamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இம்முறை தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் பிரம்மாண்டமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழக மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சியை கொடுப்போம் என உறுதியளித்தார். திமுக, காங்கிரஸ் தவிர இதர கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும், எந்தெந்த கட்சி என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்,

Lok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி – கனிமொழி

டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய திமுக எம் பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கஜா புயலால் தமிழகமே தள்ளாடிய பொழுது வராத மோடி மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இப்பொழுது திரும்ப திரும்ப வருகிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று கூறிய அவர்; திமுக சார்பில் தான் தேர்தலில் நிற்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுகவை அதிரடியாக தாக்கிய அமித் ஷா

நேற்று ஈரோட்டில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதல்முறையாக திமுகவை குறிவைத்து கடுமையாக சாடியுள்ளார். “எங்களுக்கு எதிராக கொள்ளை கூட்டணி அமைந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கான கூட்டணி இல்லை; ஊழலுக்கான கூட்டணி” என்று கூறினார். மேலும் மக்களின் விருப்பத்தை கேட்டே பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என்றும் கூறினார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்.பேச்சு, நாடகம், வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி என பல பிரிவுகளில் வெற்றி வெற்றி பள்ளியில் தனித்துவமான மாணவியாக இருந்தார். மேலும் கோகோ மற்றும் கைப்பந்து அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி அமித்ஷா விமர்சனம்

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்க இருக்கும் தருணத்தில், தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை துவங்கியுள்ளது பாஜக, பிரதமர் மோடி உட்பட தேசிய பாஜக தலைவர்கள் அனைவரும் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள், அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார், தற்போது அமைந்துள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை என விமர்சித்த அவர் அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

பா.ஜ.க மற்றும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதை அடுத்து நாளை மறுநாள் காலை 8.30 மணி அளவில் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னைக்கு வந்த பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amit Shah In Tamil Nadu: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா ஈரோட்டிற்கு வருகிறார். ஈரோட்டில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் நெசவாளர்களையும் சந்திக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

நீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங்

இன்று மக்களவையில் சமாஜ்வாதியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் உரை நிகழ்த்தினார், அப்போது மக்களவையில் உள்ள அனைவருமே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார், அதன்பின்னர் பிரதமர் மோடியை பார்த்து மீண்டும் நீங்களே பிரதமதராக வேண்டும், என வாழ்த்து தெரிவித்தார். இது அருகில் அமர்ந்திருந்த சோனியா காந்திக்கு பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வரும் தருணத்தில் முலாயம் சிங் இவ்வாறு பேசியிருப்பது தேசிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டெபாசிட் இழந்த தி.மு.க என்று நாங்கள் அழைக்கலாமா? – தமிழிசை சௌந்தர்ராஜன்

பா.ஜ.க. நோட்டா உடன் தான் போட்டி போடும் என்று கி வீரமணி கூறியதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், “தேர்தலையே சந்திக்காத வீரமணி அவ்வாறு சொல்வதற்கு தகுதி அற்றவர். ஆர் கே நகர் தொகுதியில் தி.மு.க டெபாசிட் இழந்தது. அப்படி என்றால் தி.மு.க டெபாசிட் இழந்த கட்சி என்று நாங்கள் அழைக்கலாமா?” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

2019 Lok Sabha Elections Tamilnadu: வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது, இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டணி அறிவிப்பு வெளியாகும் இந்த சமயத்திலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார், அண்மையில் மக்களவையில் பேசிய தம்பிதுரை ஜி.எஸ்.டி வரி தொடர்பாக மாநில அரசிற்கு வர வேண்டிய தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், அதனை பெற பிச்சை எடுப்பது போல் கேட்டு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாஜகவோடு நட்பும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்ற அதிரடி பதிலையும் கொடுத்துள்ளார், இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் தம்பிதுரைக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தெரிகிறது. இதனை அதிமுக தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி, ஒருவேளை கூட்டணி அறிவிப்பு வெளியானதும் தனது அதிருப்தியை தெரிவிப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. இதனை தவிர்க்க அதிமுக தலைமை அவரை சமாதான செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது தம்பிதுரை கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர், வருகின்ற தேர்தலில் அவர் அதே தொகுதியில் போட்டியிடலாம். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கிட்டதட்ட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் என்பதால் அதே தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?

2019 Lok Sabha Elections Tamilnadu: பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று ஓரிரு மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் தேசிய செயலர் முரளிதர ராவ் “தமிழகத்தில் கடந்த தேர்தலை எப்படி கூட்டணியோடு அணுகினோமோ அதேபோல் பலம் பொருந்திய கூட்டணியை அமைத்து இந்த தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

அதோடு நிற்காமல் தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகி விட்டதாக தெரிவித்தார், இதனால் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும், மேலும் பாஜக அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனவும் கூறினார்.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

ஆனால் அவர் பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெரும் என்பது குறித்து பேசவில்லை. பாஜக தலைவர்கள் சிலர் அதிமுகவோடு தான் கூட்டணி அமையும் என பேசிவருகிறார்கள். மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையை பெருத்தவரையில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி குறித்து இன்னும் முடிவெக்க வில்லை. பாமக இளைஞர் அணி செயலர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அண்மையில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

மேலும் தேமுதிகவும் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பின்னர் அதில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் திமுகவின் மெகா கூட்டணிக்கு நிகரான ஒரு பலம் வாய்ந்த கூட்டணியாக பாஜக கூட்டணி அமையும்.

ஒருவேளை நான்கு கட்சிகளும் ஒர் அணியில் திரளும் பட்சத்தில் தொகுதி பங்கீடு சவாலாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடதக்கது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

பாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?

அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை மாநிலமே எதிர்பார்த்து வரும் நிலையில் கட்சி தலைமை அமைதி காத்து வருகிறது. இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், “பாஜக, பாமக மற்றும் தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் யுக்திகளை கையாளுகிறதா அதிமுக ?

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளர். தமிழகத்தை பொருத்தவரை அனைத்து வர்கத்தை சார்ந்தவரும் உள்ளனர். இன்றைய சமூகத்தில் பல்வேறு வளர்ச்சிகளை நாம் அணுதினமும் பார்க்கிறோம், ஆனால் அதனை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களால் ருசிக்கமுடியாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நிதிநிலைமை. இன்றைய கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு நிகராக வளர்ந்து வருகிறது. மருத்துவமும் செலவும் இமாலய உயரத்தை தொட்டுவிடுகிறது. இதன் விளைவாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் ஏழை தொழிலாளர்களின் துயரை மொத்தமாக நீக்கிவிடாது என்றாலும் அவர்களுக்கு அறுதலாக இருக்கும் என்பதே உண்மை. இந்த திட்டத்தின் வாயிலாக வருடத்திற்கு 24,000 ரூபாய் என்பது ஏழை தொழிலாளர்களுக்கு மிகவும் தேவையான ஓன்றாக இருக்கும். ஒரு கிராமப்புற குழந்தையின் கல்வி செலவுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் 60 லட்சம் தொழிலாளர்கள் நன்மை அடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது நல்ல திட்டம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை, இருப்பினும் அதனை நடைமுறைபடுத்த இது சரியான காலம்தானா என்ற கேள்விகளை எழுப்புகிறது. அண்மையில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அப்போது தேர்தலை கருத்தில் கொண்டு தான் அதிமுக சில திட்டங்களை அறிவித்துள்ளது என்ற அதே குற்றச்சாட்டு இதற்க்கும் பொருந்தும். ஏழை தொழிலாளர்களுக்கு ஊக்க தொகை கொடுப்பது பெருமை அல்ல, ஏழை தொழிலாளர்களை உயர்த்த ஒரு திட்டம் தீட்டாதது ஏன் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. இந்த 2000 ரூபாயும் 60 லட்சம் தொழிலாளர்களை சென்று அடையுமா? இந்த திட்டம் எப்போது அமல் படுத்தப்படும், என்ற பதிலுக்காக காத்திருக்கிறார்கள் ஏழை தொழிலாளர்கள். பொதுவாகவே தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் வரும் சூழலில் இலவச திட்டங்கள், கடன் ரத்து போன்று திட்டங்களை அறிவித்து மக்களை கவர்வது தமிழக அரசியலில் வழக்கமான ஒன்று தான்.

தொகுதி பங்கீட்டில் இழுபறியா ?

மக்களவை தேர்தல் களம் தமிழகத்தில் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது, அதனை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், இந்த மாதம் ராகுல் காந்தியும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார், அது ஒருபக்கம் இருந்தாலும் திரைக்கு பின்னர் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியே கூட்டணியோடு தான் தேர்தலில் ஈடுபட உள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கூட்டணியோடு தான் தேர்தலை அணுக இருக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எளிதில் நிறைவு பெறாததற்கு, தொகுதி பங்கீடும் ஒரு இடையூறாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, முந்தைய தேர்தல் சமயத்தில் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லாததனால் கூட்டணியே முறிவடைந்துள்ளது. எடுத்துகாட்டாக 2016 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவும் தமிழ்மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்தை நல்ல முடிவு எட்டப்பட்டாலும் தொகுதிகள் குறைவு என்பதற்காக வெளியேறிய தமிழ்மாநில காங்கிரஸ் மக்கள் நலக் கூட்டணியோடு இணைத்து கொண்டது. அதே நிலைதான் தமிழகத்திலும் நிலவுவது போல் தெரிகிறது.

திமுக பொருத்தவரை இம்முறை மெகா கூட்டணி அமையும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது.. அதிமுகவை பொருத்தவரை தேசிய கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறினாலும் பாஜகவுடனான கூட்டணிக்கே அதிக வாய்ப்பு என்பதை அரசியல் நிகழ்வுகள் தெரியப்படுத்துகிறது

இன்னும் சில

தமிழக கட்சிகளில் இன்னும் சில கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ் மேலும் சில உள்ளூர் கட்சிகளும் முடிவை அறிவிக்காமல் இருக்கின்றன.

எங்களுக்கு இந்த தொகுதி

பொதுவாகவே தொகுதி பங்கீட்டில ”’எத்தனை தொகுதி” என்பதை விட ”எந்த தொகுதி” என்பதே சலசலப்பை ஏற்படுத்தும், சில கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வரவேற்பு இருக்கும், ஆகையால் அவர்கள் அங்கே போட்டியிட நிர்பந்திப்பது வழக்கம், அதற்கு கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதுபோல் பல்வேறு பிரச்சனைகள் குறுகிய காலத்தில் தலைதூக்கும், இதனை சமாளித்து தேர்தலை சந்திப்பது எளிதல்ல.

தற்போதைய நிலையில் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் தான் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

யார் யாருடன் கூட்டணி ! இன்னும் சில தினங்களில் !