நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி – விஜய் மல்லையா மேல்முறையீடு

UK home secretary approves extradition of Vijay Mallya

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த டிசம்பர் 10-ம் தேதி மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சகமும் தற்போது ஒப்புக்கொண்ட நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.