January 30, 2019
கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும்: அன்னா ஹசாரே
5 years ago
லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை தொடங்கியுள்ளார். மகாராஷ்டிராவின் அகமது நகரில் உள்ள ஹசாரேவின் சொந்த ஊரான ரலேகான் சித்தியில் தொடங்கப்பட்டுள்ள இந்த உண்ணா விரதத்தில் பேசிய அவர், லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிறைவேற்றுவதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவித்த பின்னரே உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.