கட்டணங்களை நிர்ணயித்து தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க பேச்சுவார்த்தை

Indian-Railways

சில ஆண்டுகளுக்கு முன்னர் சில ரயில் நிலையங்களில் துப்புரவு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய முனையங்களை உருவாக்கி, கட்டணங்களை தனியார் நிறுவனங்களே நிர்ணயித்து ரயில்களை இயக்கலாம் என்று பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.