ஆர்பிஐ எச்சரிக்கும் “எனிடெஸ்க்” ஆப்

Any Desk App RBI Alert

RBI AnyDesk Warning: எச்சரிக்கை!! உங்கள் வங்கி கணக்கு பணத்தை அபேஸ் செய்யும் ஆப் “எனிடெஸ்க்” (AnyDesk) – ஆர்பிஐ எச்சரிக்கை.

இந்தியாவின் சென்ட்ரல் பேங்க்-காக இருந்து வரும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு அப்ளிகேஷனை நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆர்பிஐ அனைத்து வங்கிகளுக்குமான தங்கள் சைபர் செக்யூரிட்டி மற்றும் ஐடி எக்ஸாமினேசன் செல்-க்கு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

RBI AnyDesk Warning: ஆர்பிஐ எச்சரிக்கும் “எனிடெஸ்க்” ஆப்

இது எந்த அப்ளிகேஷன்? அதில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்…

“எனிடெஸ்க்” (AnyDesk) என்ற பெயர் கொண்ட இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டாம் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆப், வங்கி வாடிக்கையாளர்களின் மொபைலில் இருந்து வங்கி கணக்கின் சேவைகளை அக்சஸ் செய்ய விடாமல், அதில் உள்ள தகவல்களை திருடி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமானது என்னவென்றால், உங்கள் பேங்க் அனுப்பும் OTP-ஐயும் ரீட் செய்து, உங்கள் வங்கி கணக்குகளை சில செகண்ட்களில் முழுமையாக அளித்து விடும்.

அப்பெக்ஸ் வங்கியின் அறிவுறுத்தலின் படி, UPI பயனாளர்கள் தங்கள் வங்கி பரிமாற்றங்களில் முழு கவனம் செலுத்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், டிஜிட்டல் பேமென்ட்கள் அவசியமாகவே இருந்து வருகின்றன.

சமீபத்தில் ஒரு UPI பயனாளரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கே தெரியாமல் அவரது ஸ்மார்ட் போனில் இருந்து 6.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த “எனிடெஸ்க்” (AnyDesk) அப் எப்படி வேலை செய்யும்?

இந்த ஆப்-கள் எளிதாக வேலை செய்கிறது. ஹாக்கர்கள் இந்த ஆப்-ஐ உங்கள் மொபைல் போனில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்வார்கள்.

ஒரு முறை நீங்கள் இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்து விட்டால் ஹாக்கர்கள் 9 டிஜிட் கோடு ஒன்றை ஜெனரேட் செய்து அதன் மூலம் உங்கள் மொபைல் போனை அக்சஸ் செய்வார்கள். ஒரு முறை இது நடந்து விட்டால், உங்கள் ஸ்மார்ட்போன் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் ஹாக்கர்களுக்கு இந்த ஆப் மூலம் எளிதாக கிடைத்து விடும்.

இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், ஒருமுறை ஹாக்கர்கள் இந்த ஆப்-ஐ உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து விட்டால், அவர்கள் உங்களிடம் இந்த ஆப்-ஐ பயன்படுத்த உங்களிடம் அனுமதி கேட்பார்கள். மேலும், உங்களுக்கு வரும் OTP-களை ஹாக்கர்கள் இடைமறித்து திருடி விடுவார்கள். OTP-யை அவர்கள் பெற்று விட்டால், அவர்கள் எளிதாக பேங்க் கணக்கை அணுக அதிக நேரம் தேவைப்படாது.

RBI AnyDesk Warning: ஆர்பிஐ எச்சரிக்கும் “எனிடெஸ்க்” ஆப்

ஹாக்கர்கள் உங்கள் UPI பிளாட்பாரம் அல்லது எந்த வகையான மொபைல் வாலட்களையும் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து கொள்ளவார்கள். இதுவரை இதுபோன்ற ஹாக்கர்களால் இந்தியாவில் நூறு கோடி ரூபாய் வரை திருடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பண மோசடியை எப்படி தடுப்பது?

இதுபோன்ற மோசடியை தடுக்க ஒரேவழி எனிடெஸ்க் என்ற பெயர் கொண்ட ஆப்-ஐ டவுன்லோடு செய்யாமல் இருப்பதேயாகும். ஒருவேளை நீங்கள் இதை டவுன்லோடு செய்திருந்தால், உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்து கொண்டு உங்கள் மொபைல் செக்யூரிட்டியை செக் செய்து கொள்ள வேண்டும்.

இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவுரையில், உண்மையில் இந்த மோசடிகளுக்கு UPI பரிமாற்றங்களே உதவியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் எஸ்பிஐ வங்கி, ஏடிஎம் கார்டு மோசடிகளை தடுப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RBI AnyDesk Warning: ஆர்பிஐ எச்சரிக்கும் “எனிடெஸ்க்” ஆப்