பொன்னியின் செல்வன்” தமிழ் வெப் சீரிஸ் தயாரிக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

Soundarya Rajinikanth

சோழர்களில் முக்கியமானவனும், ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் பற்றிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை, தமிழ் வெப் சீரிஸ்-ஆக தயாரிக்கும் முயற்சியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசின் காலத்தைப் பற்றி விறுவிறுப்பும் வீரமும், தொன்மையும், காதலும், நகைச்சுவையும் கலந்த காவியமாக இது இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.