Automobile News

வாகன பதிவெண்ணுக்கு ரூபாய் 31 லட்சம்

கேளராவில் ஒரு தொழிலதிபர் தனது புது காருக்கு 31 லட்ச ரூபாய் கொடுத்து வாகன பதிவெண்ணை ஏலம் எடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது வாகனத்திற்கு பேன்சி எண்கள் வாங்க முனைப்பு காட்டுவது வழக்கும். ஆனால் அதிக விலை என்பதால் சிலர் பின்வாங்குவதும் இயல்பு. ஆனால் இந்த தொழிலதிபர் தனது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காருக்கு 31லட்சம் கொடுத்து பதிவெண் வாங்கியது இடைநிலை குடும்பத்தினருக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்கால கார் கண்காட்சியில் சூப்பர் கார் மாடலை காட்சிபடுத்தியது டொயோட்டா

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெற்று வரும் கார் கண்காட்சியில் எதிர்காலத்தில் தயாரிக்க உள்ள கார்களின் மாதிரிகளை பல நிறுவனங்கள் காட்சிப் படுத்தி உள்ளன. இதில் தற்போதுள்ள கார்களின் மேம்படுத்தப்பட்ட மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 21 ஆண்டுகளுக்கு பிறகு தனது சூப்பரா கார் மாதிரியை டயோட்டா காட்சி படுத்தி உள்ளது. போர்டு நிறுவனம் மஸ்டங் மாடலின் புதிய வடிவத்தை காட்சிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.